பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சு. சமுத்திரம் ஸ்வீட்டுகள் கொடுக்கப்பட்டன. காபிகள் குடிக்கப் பட்டன. மோகினி தான் கல்லூரியில் படித்த விதத்தை விளக்கிக் கொண்டிருந்தாள். பேச்சுவாக்கில் தலை என்னமா வவிக்குது' என்று உஷா சொன்னபோது, 'அய்யய்யோ’ என்று பதறிப்போய், அவள் தலையைத் தடவிவிட்டாள். கனகம்மாவின் புடவையில் இரண்டு சொட்டு காபி விழுந்தபோது, தன் இடுப்பில் செருகி வைத் திருந்த கைக்குட்டையை எடுத்துப் புடவையைத் துடைத்து விட்டாள். எல்லோரும் அவளை ஆச்சரியமாகவும், அவளைக் கொண்டு வந்தவனை அனாவசியமாகவும் பார்த்துக்கொண்டு நின்றபோது, அய்யய்யோ... நேரமாயிட்டுது’’ என்று சொல்லிவிட்டு அவள் எழுந்து, சீனிவாசனைப் பார்த்தாள். அவன் வீட்டுக்குள்ளேயே காரைத் தேடுபவன்போல் அங்கு மிங்கும் சுற்றிவிட்டு, வெளியே வந்து காரைச் சரியாக வாசலுக்கு முன்னால் அடைத்தான். யோகினி பிரியமில்லாதவள் போல் தயங்கித் தயங்கி வெளியே வந்தாள். கிழவர் அருணாசலம் இருந்த அறைக் குள் எட்டிப் பார்த்தாள். அவரிடம் சொல்லிக் கொள்ள லாமா என்று நினைத்து வாயைத் திறந்தவள் மூடிக்கொண் டாள். அவர் குடி முழுகிப் போனதுபோல் குப்புறப் படுத்துக் கிடந்தார். - அடிக்கடி வாங்கோ அண்ணி' என்று கமலா எதிர் கால முறையை இப்போதே முறைப்படுத்தினாள். அவள் அடிக்கடி வரவேண்டும் என்பதைக் காட்டும் அறிகுறியாக, சபாபதி சட்டைப் பித்தானை மாட்டிக்கொண்டான். மோகினி காரில் ஏறுவது வரைக்கும் பேசிக்கொண்டே போனாள். . கமலா வீட்டுக்கு வாங்கோ. ஒரேயடியா அடஞ்சிக் கிடந்தா போரடிக்கும்." • உஷா. வீட்டுக்கு வாம்மா! நான் இங்கிலீஷ் கத்துத் தாரேன். '