பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I7 & சு.சமுத்திரம் திருக்கிறேன். ஒண்ணுகிடக்க ஒண்ணு பண்ணிடப்படாது" என்று சொன்னபோது, மகள்காரி நான் கெட்ட கேட்டுக்கு ஐ.ஏ. எஸ். ஹஸ்பெண்ட் வேண்டியதுதான், என்று முகத் திலடித்ததுபோல் கூறினாள் ஒண்னு கிடக்க ஒண்ணு பண்ணிட்டியாடி?’ என்று அம்மாக்காரி கேட்டபோது, * ஒன்னை மாதிரி என்ன நினைச்சியா" என்று பட்டென்று திருப்பிக் கேட்டாள். அதிவிருந்து, மோகினி பேச்சைக் குறைத்துக்கொண்டாள். பாசத்தைக் குறைக்க முடிய வில்லை. இன்னொரு கூத்து. ஒரு வருடத்திற்கு முன்பு, அப்பாவைப் பெற்ற தாத்தாவின் படத்தை, எங்கேயோ கிடந்த ஒரு தகர டப்பா வுக்குள் இருந்து எடுத்த கலா, அந்தப் படத்தை என்லார்ஜ்" செய்து கோல்டன் கலர் பிரேம் போட்டு தன் அறையில் மாட்ட வேண்டும் என்று அடம் பிடித்தாள். மோகினி முதலில் மறுத்தாள். மகள்காரி சாப்பிட மறுத்தாள். கடைசியில் மோகினியே அந்த கர்மத்தை' என்லார்ஜ் செய்து, மகளின் அறையில் மாட்டினாள், பிறரை வளைத்துப் பிடிக்கும் தான், மகளுக்கு வளைந்து போவதை மோகினி சில சமயம் தான் அடிப்படையில் நல்லவள் என்பதற்கு அத்தாட்சியாகவும் எடுத்துக் கொண் டாள். இருந்தாலும், எம். ஏ. வில் சேரச் சொன்னால் நான் கெட்ட கேட்டுக்கு..." என்கிறாள். நடந்து போகாதே! காரை எடுத்துக்கொண்டு போ' என்றாலும் 'நான் கெட்ட கேட்டுக்கு..." என்கிறாள். நகைகளை போட்டுக்க' என்றாலும் நான் கெட்ட கேட்டுக்கு. இவள் என்ன கெட்டாள்? இவளுக்காகக் கெட்டது நான்தானே! இவள் போன வருஷம் மூன்றுநாள் கல்லூரி சார்பில் பிக்னிக் போன போது, துடித்துப்போனது நான் தானே! பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுதான்.