பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 5.3 ஒங்க அண்ணி ஏன் இதையெல்லாம் அனுமதிக் கிறாள்?" அதுதான் எனக்கும் புரியல!' பானுவின் கையைப் பிடித்துக்கொண்டு நின்ற பாமா, * அம்மாவும். அவங்களோட சேர்ந்து குடிச்சுட்டு தலையை பம்பரம் மாதிரி ஆட்டுறாள். அதனாலதான் பயந்து வந்துட் டேன்.’’ என்று சொல்லிவிட்டு, இருவரையும் உயரமாய் பார்த்தாள். பானு, கணவனைப் பொருள்பட பார்த்தாள். அண்ணன் குடிப்பதை, இதுவரை அண்ணி, ஒப்புக்குக்கூட கண்டிக் காததை அவள் யோசித்துப் பார்க்கிறாள். நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை வந்தது. கீழே குனிந்து உட்கார்ந்து, அண்ணன் மகளை தோளில் சாய்த்துக் கொண் டாள். பிறகு தன் பாட்டுக்கு அழுகைக் குரலில் பேசினாள். தினமும் இந்த வீட்ல பார்ட்டியாய் போச்சு. அதுவும் விஸ்கி பார்ட்டிதான். அண்ணன் அசல் குடிகாரனாயிட்டான். குடிச்சுட்டு ரேஸுக்கு போறதும், ரேஸால தோற்ற துக்கத்தை மறக்க, குடிக்கறதும் அவனுக்கு வாடிக்கையாய் போயிட்டு. போனவாரம் ரேஸ்ல செமத்தையா விட்டுட் டானாம். பாலவாக்கத்துல இருபத்தஞ்சு கிரவுண்டை விற்றுட்டாராம். இது எதுல கொண்டுவிடப் போகிறதோ தெரியல. காலையில் பேக்டரி மானேஜர் வந்திருந்தார். பேக்டரி பணத்தையும், அண்ணன் எடுத்துச் செலவழிக் கிறாராம். பேக்டரி லாஸ்ல ஒடத் துவங்கிடுமா இதைவிட அதை நீங்க இழுத்து மூடிடலாம். நாளைக்கு நீங்க என்மேல குறை சொல்லக் கூடாதென்று, சொல்றேன்’னு சொல் லிட்டுப் போனார். அண்ணன் பாலவாக்கத்தைக் கடித்து, சினிமா தியேட்டரைக் கடித்து, கடைசில பேக்டரியையும் கடிக்கப்போறார். எல்லாரும் தெருவுல நிற்கப்போறோம்! நீங்க நல்லா வேடிக்கை பார்க்கலாம்.'"