பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 8莎 பிளீஸ்... எழுந்திருக்காதே! அம்மா காதுல ஒரு நாள் போட்டேன். அவள் அப்பா காதுல போட்டாள். அவ்வளவு தான். அவரு போட்ட கூச்சலில் என் அம்மா என்கிட்ட வந்து டேய்...உன்னிஷ்டமா கல்யாணம் நடந்தா இந்த வீட்ல அதுக்கு முன்னாலயோ, பின்னாலேயோ ஒரு இழவு தாண்டா நடக்கும்’னு அழுதுகிட்டே சொன்னாள். அதனாலதான் யோசிக்கிறேன். அப்பா வாழ்க்கையில ரொம்பக் கஷ்டப்பட்டவரு சொந்தக்காரங்களால Gиотg th போனவரு. ஆபீஸ்ல உ ண் ைம ய ா இருந்ததுனால புரமோஷன் இல்லாம அழுத்தி வச்சிருக்காங்க. இதனால எந்தப் பிரசினையையும் தன் மானத்துக்கு விடப்பட்ட சவாலா நினைக்கிறவரு. அதனாலதான் யோசிக்கிறேன்." என்னங்க நீங்க... எங்கப்பா கூட வாழ்க்கையில ஏமாந்து போன வராம்! தஞ்சாவூர்ல நிறைய சொத்து இருந் திருக்கு! அவ்வளவையும் எவள் எவளுக்கெல்லாமோ எழுதிக்குடுத்து... ரொம்ப அப்பாவி அம்மா எனக்கு விவரம் தெரிஞ்ச நாளையில இருந்து ஒரே படுக்கைதான்." மோகினி அவனையே பார்த்தாள். சிரிப்பவள் போல் சிறிது கண்களை மூடினாள். பிறகு முதன்முதலாக அவன் பெருவிரலை லேசாகப் பிடித்துக்கொண்டே, மனிதர்கள்ல நல்லவங்கன்னும் கிடையாது. கெட்டவங்கன்னும் கிடை யாது. சொல்ற விதமாச் சொன்னா எல்லாரையும் நம்ம பக்கம் இழுத்துடலாம். நீங்க சரியான மண் குதிரை." நான் நிலைமையைச் சொன்ன பிறகும் நீ இப்படிப் பேசினா எப்டி?’ எப்டின்னு சொல்றேன் கேளுங்க. நான் பப்ளிஸிட்டி வேலையில் இருக்கிறவள். ஆட்களை எப்படி கவர் பண்றது என்கிற டெக்னிக் தெரிஞ்சவள். ஒரு ஆளோட இமேஜை ஊதவச்சா அதுக்குள்ளே இருக்கிறத நம்ம இஷ்டத்துக்கு மாத்திட முடியும். நீங்க ஒங்க அப்பாவோட சுபாவத்தை