பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 * சத்திய ஆவேசம்

கொடுத்தேன். இனிமேல், ஒங்க தலையில கிரீடம் வைக்கிறது மாதிரி பொறுப்புக் கொடுப்பேன். நாளைக்கே எழுதிக் கொடுத்திடுங்க. ஒ. கே. நீங்க போகலாம்."

கன்னையா, தன்னிடம் மேற்கொண்டு பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதுபோல், வேடிக்கையர்களிடம் பேசிக்கொண்டிருந்த, ஜி.எம்.மின் பார்வையில் படுவதற்காக கன்னையா, யாசகாய் நின்றார். கால்மணி நேரம் கழித்து, பார்வையில் பட்ட ஜி.எம். "இன்னுமா நிற்கிறீங்க? நாளைக்கு எழுதிக் கொடுத்தாகணும். நான் செகரட்டரிகிட்டே கேட்பேன். நீங்க அவர்கிட்ட சொல்லிடனும். ஒ.கே.யூ.கேன்.கோ. அப்புறம் என் ஒய்ப் ஒரு கார்டுனிஸ்ட்.? என்று வாடிக்கையண்களோடு பேசிக் கொண்டே போனார்.

கன்னையா, வெறுமையோடு வெளியேறினார். ஜி.எம். எப்படி சொந்த விவகாரத்தில் சொந்தம் கொண்டாடலாம்? நான் சொல்வதைக் கேட்காமலே, ஆணையிட்டால் என்ன அர்த்தம்? அப்படியானால், இதே தொழிற்சாலையில், மிகப்பெரிய வேலை நிறுத்தம் நடந்தபோது என்வரையில் அது தவறானது என்று தோன்றியதால், என் சோதரர்களை மதிக்காமல் வேலைக்கு வந்தேனே. அந்த வேலை நிறுத்தத்தை சமாளித்ததாய் அடிக்கடி இந்த ஜி.எம். மார் தட்டுகிறார். யாரால்? யாரால்? என்னைப் போன்ற கருங்காலிகளால்தானே? அன்று முதுகில் தட்டியவர். இன்று அதே முதுகில் குத்தப் பார்க்கிறாரே.

கன்னையா, வெற்று மனிதராய், விண்மனிதராய் உழைப்பிடம் வந்தார். ஸ்பேனர்களை எடுக்கப் போனர். மனம் முரண்டு பிடித்தது. இந்த ஜி.எம். சொல்வதைக் கேட்காமல், இங்கே வேலை பார்க்க முடியுமா? தொழிலாளர் தலைவர்களையே, போலீஸாரை வைத்து அடி அடியென்று அடித்தவர். ஏதோ ஒரு சாக்கில் சஸ்பென்ட் செய்யப்படலாம். இதோ. வேலை நிறுத்தத்தின்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டு, போலீஸாரால் அடிபட்டு, அப்புறம் தொழிலாளர் பலத்தால் வேலைக்குச் சேர்ந்த யூனியன் லீடர் கந்தன் போகிறார். இவரிடம் நடந்ததைச் சொல்லலாமா? இங்கே சுற்றி நிற்கிற தொழிலாளர் கூட்டத்திடம் அழுது புலம்பலாமா? எப்படி முடியும்? இவர்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்து, வயிறு காய்ந்து கிடந்தபோது, அவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டியவன் நான். அவர்கள் போலீஸாரால் அடிபடும்போது போலீஸ் பாதுகாப்பில் வேலைக்கு வந்தவன் நான். இப்போ எனக்கு யார் பாதுகாப்பு? எது பாதுகாப்பு?

கன்னையாவிற்கு வேலை ஒடவில்லை. எப்படியோ சமாளித்துவிட்டு, வழிப்டு முடிந்ததும் தொழிற்சாலையை விட்டுப் புறப்பட்டார். கேட் காவலாளி வழக்கம்போல், அவர் பையையும், மெய்யையும் சோதனையிட்டார். உடம்புக்கு மேல தேடினால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/155&oldid=558763" இலிருந்து மீள்விக்கப்பட்டது