பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* க.சமுத்திரம் 170

அப்பாவு, தயங்கித் தயங்கி எழுந்தார். சுற்றுமுற்றும் சங்கடமாகப் பார்ப்பவர்போல் பார்த்துக் கொண்டார்.

அப்பாவு பெளவியமாகப் பார்த்து பார்த்து, மெள்ள மெள்ளச் சொன்னார். பேராசிரியர் பெருமாள்சாமியின் காதல் லீலைகள், கெளரவத்திற்கு அப்பால் போய்விட்டதையும், அவர் செய்த கையாடல்களைப் பற்றியும், ஒரு ஊழியர் பெயரில் பேங்கில் கணக்கு வைத்திருப்பது பற்றியும், அழாக் குறையாகச் சொன்னார். இன்கம்டாக்ஸ் காரர்களிடம், கல்லூரியின் கெளரவத்தைக் கருதி, தான் பெருமான்சாமியை விட்டுவிடும்படி கெஞ்சி வருவதாகவும், ஆனால் அவர்களோ, பல தஸ்தாவேஜுகளையும் கைப்பற்றியிருப்பதாகச் சொல்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். அப்படியும் முடிக்காமல், பேராசிரியரைப் பற்றி சொல்லிக் கொண்டே போனார்.

செய்தியாளர்கள் குறிப்பெடுத்தார்கள். பின்னர், அப்பாவு, சொல்லி முடித்ததும், ஒரு செய்தியாளர் தேங்க்யூ! என்றார். உடனே எல்லோரும் எழுந்தார்கள். பீர் ஜாடிகளும், விஸ்கி பாட்டில்களும் இருந்த இடத்தை நோக்கி நகர்ந்தார்கள். பெக் டெக்காய் போட்டார்கள். ஏதோ ஒரு நார்குச்சி மாதிரி ஒன்றில் குத்தி வைக்கப்பட்ட மீன் துண்டுகளையும், கறி வறுவல்களையும் அசைத்தபடி பல ரவுண்ட் வந்தார்கள். அப்பாவு, மகனுக்காக ஜூஸ் குடித்தார். மகன், அப்பனுக்காக கூல்டிரிங் குடித்தார். பிறகு, இருவரும் ஆளுக்கொருவராய் பிரிந்தார்கள். சர்வர்களிடம் விஸ்கி லார்ஜர் என்றார் மகன். நிறையா ஊத்தப்பர் என்றார் அப்பாவு.

கண்ணாடிக் கோப்பையை கையில் ஏந்திய ஒருவன் கிசுகிசுத்தான். அப்பாவுவிடம் வந்து "மிஸ்டர் அப்பாவு, ஒர்ரி டோண்ட். சாமிப் பொருமாளை டக்கர் செய்திடுறோம்" என்றான். உடனே அப்பாவு "அது நீங்கள் செய்யுற சோஷியல் சர்வீஸ் என்றார்.

செய்தியாளர்கள், தலைகளை ஆட்டியபடியே, கையிலுள்ள கோப்பைகளை உற்றுப் பார்த்தார்கள். அந்தக் கிண்ணங்களில், பேராசிரியர் பெருமாள்சாமியின் ரத்தம் ஊற்றப்பட்டிருப்பதுபோல், அவை சிவந்து காணப்பட்டன. நிருபர்கள், அவற்றை உறிஞ்சும் பணியில் மும்முரமானார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/182&oldid=558789" இலிருந்து மீள்விக்கப்பட்டது