பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 * சத்திய ஆவேசம்

தாற்காலிக முதல்வர் மாணிக்கம், குறுக்கே பேசினார்.

"அய்யா இடத்துல நான் இருந்திருக்கவே படாது. ஆனாலும் ராமனை நெனச்க பரதன் ஆண்டது மாதிரிதான் நானும்."

"நீங்க ஆண்ட லட்சணம் எல்லாருக்கும் புரியும் ஸார். கொஞ்ச நேரம் சும்மா இருங்க ஸார். குரு. நீ. பெருமாள்சாமி ஸார் கிட்டே வந்த காரியத்தைப் பேசுப்பா..."

"ஒங்களை நாங்க திராட்ல விட்டுட்டதால, காலேஜ் நிர்வாகம் எங்களையும் திராட்ல விட்டுட்டாங்க. புது பிரின்ஸ்பாலாய் சின்னராசுவை போடப் போறாங்க. நமக்கு இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியாது. அதனால, ஒங்களையே மீண்டும் பிரின்ஸ்பாலாய் போடும்படி போராடப் போறோம். இதுக்கு ஒங்க சம்மதம் வேணும்."

"ஸோ. ஐ. சைன் பை கான்ட்ராஸ்ட். சின்னராசால. நான் பெரியவாராசாவா ஆயிட்டேன் அப்படித்தானே?

"இப்போ ஆர்க்யூ பண்ண டயம் இல்ல. ஒங்களை சஸ்பென்ட் செய்தப்போ போராடப் போனோம். நீங்கதான் தடுத்திட்டிங்க. அப்பாவு, ஒங்களுக்கு எதிராய் காலேஜ் கவுன்சிலில் தீர்மானம் போடச் சொன்னபோது, அதை ஒட்டு மொத்தமாய் எதிர்த்தோம். அதனால தீர்மானமே வரல. இனிமேல் பிரின்ஸ்டாலாய் ஆகிறது ஒங்களுக்குப் பிடிக்குதோ, இல்லியோ, எங்களுக்குப் பிடிக்குது. மாணவர் சங்கமும், நீங்கன்னா, எங்க பேராட்டத்துக்க்கு ஆதரவு கொடுப்பாங்களாம். யுனிவர்ஸிட்டி ஆசிரியர் சங்கமும்,தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கமும், நம் போரட்டத்துக்கு ஆதவு கொடுக்கப் போறதாய் தெரிவிச்சிருக்காங்க ஒரே வார்த்தை சம்மதமுன்னு மட்டும் சொல்லுங்க ஸார். ஒங்க கிட்ட கேட்காமலே போராடலாமேன்னு நீங்க கேட்கலாம். அப்படிப் போராடுனா நீங்களே எங்க போராட்டத்திற்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லிடப்படாதே. உங்களுக்காக போராட முன்வந்த மாணவர்களையும் அப்படித்தானே செய்தீங்க. இப்போவாவது இணக்கம் தெரிவிங்க சார். வாய் திறந்து சொல்லுங்க

சார்.

பெருமாள் சாமி சொல்லவில்லை. யோசித்தார். தன்னைப் பற்றியும், தான் பட்டபாட்டை பற்றியும் கண்டுக்காத இந்தப் பயல்கள், ஜூனியர் பயலிடம் மாட்டிக்கிட்டு, வாங்கிக் கட்டிக்கட்டும் என்றுகூட நினைத்தார். அப்போது முத்தையாவின் தந்தை தனக்கு விளக்கிய யதார்த்த உபதேசம் காதில் ஒலித்தது. தற்செயலாய் மகளைப் பார்த்தால் அவளோ சம்மதம் சொல்லும்படி அபிநயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/233&oldid=558840" இலிருந்து மீள்விக்கப்பட்டது