31 * சத்திய ஆவேசம்
மதிப்பிருக்கிறதா என்பதை அறிய, பல தடவைத் திரும்பிப் பார்த்தார். ஒரு ஆசிரியரும், ஒரு அடி கூட நகரவில்லை. அதே சமயம், நீ யாருய்யா எங்களைக் கேட்க?' என்று கேட்கும் துணிச்சலும் இல்லாமல், முத்தையாவையும், அப்பாவுவையும் மாறி மாறிப் பார்த்தார்கள்:
பாம்பு, தலையை பின்னால் வைத்துக்கொண்டு, பொந்துக்குள் முதலில் வாலை நுழைப்பதுபோல், அப்பாவுவும்.அங்கியும், மாணவர்களைப் பார்த்தபடியே, முதல்வர் அறைக்குள், பின்நோக்கி நடந்தார்கள்.
முத்தையாவிற்குள் ஒரு முடிவு ஏற்பட்டது. அந்த முடிவு, ஆட்டோரிக்ஷா காலில் ஏறி வீட்டில் காலொடிந்து கிடக்கும் தந்தையை மறக்க வைத்தது. அரைப்படி அரிசிக்கு அல்லாடும் அம்மாவை, அடிமன சமாதிக்குள் வைத்தது. முழுக்க முழுக்க அவனுள்ளே ஒரு ஆவேசம். அப்பாவு, தனக்குத் தகுதியில்லாத ஒரு அறைக்குள், 'ஆனந்தக் கூத்தாடிம செல்வதைப் பார்த்ததும், அவனுக்கு ஊழி நடனம் ஆடப்போவது போன்ற கோபாவேசம். கரங்கள் முஷ்டிகளாகும் போதே, வார்த்தைகள் கர்ஜனைகளாயின.
"நமக்காகப் போராடி. நம்மாலேயே சஸ்பென்டாகி இருக்கும் நம் முதல்வருக்காக நாம் போராடித்தான் ஆகவேண்டும். கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும். முதல்வர் மீது விழுகிற அடி, நம்மீது விழப்போகும் பேரிடி. வாருங்கள். உள்ளே போன அப்பாவு, வெளியே போக முடியாதபடி முற்றுகை செய்வோம். வாருங்கள், சோதாரர்களே வாருங்கள். அடாவடிக்கு, பதில் பதிலடிதான்."
"ஒழிக... ஒழிக..." "அடாவடி அப்பாவு ஒழிக..."
மாணவர்கள், கோஷக் கூச்சலோடு, கல்லூரி முதல்வர் அறையை நோக்கி நகர்ந்தபடியே, மூன்று மூன்று பேராய் அணிவகுக்கப் போனார்கள். அந்த வரிசை அணிக்கு கருட வியூகம் கொடுப்பதுபோல், ஆசிரியர்கள் அந்தப் பறவையின் சிறகுபோல் இருபக்கமும் தங்களை அறியாமலே நின்றார்கள்.
கூட்டம் முன்னேறப்போன வேளை... முகங்கள் ரத்தக் கட்டிகளான நேரம். லைப்ரேரியனும், நிலைமையின் உணர்ச்சிக்கு வயப்பட்டு, நூலகக் கட்டிடத்தை மூடப்போன சமயம் ஒரு சில கல்லூரி ஊழியர்கள், நிலைமையை அப்பாவு முன்னால் பணிவன்புடன் சமர்ப்பிப்பதற்காக ஒடிக் கொண்டிருந்த கட்டம். மாணவர்களை அடித்துவிட்டு அதற்கான நற்பலனை அனுபவிக்கும் ஹெட் கிளார்க், சில லோகல் ரெளடிகளோடு, ஆடிட்டோரியத்திற்குள் சோடா பாட்டில்களைப் புரட்டிக் கொண்டிருந்த வேளை