பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 * சத்திய ஆவேசம்

முத்தையா, பதிலளித்தான். "அவர் கடைசியாய் செய்த காரியத்தையும் சொல்லு. அதைச் சொல்ல ஏன் மனசு வரல?"

"அவர் கடைசியாய் செய்தது, கல்லூரிப் பணத்தை மோசடி செய்ததுதான்."

"பிரபு. ஒன் வாய் அழுகிடும். பேராசிரியர். பெருமாள்சாமி, பணத்தை மோசடி செய்தார்னு சொல்ற எவனும் உருப்பட மாட்டான்."

முத்தையா, சிரமப்பட்டு வாய்க்கு வந்த சில வன்முறை வார்த்தைகளை, நெஞ்சுக்குள் திருப்பி விட்டான். இந்தச் சமயத்தில் மாணவ அணிவகுப்புக் கலைந்து, மாணவர்கள், விவாதம் நடந்த இடத்தருகே, முட்டை வடிவமாய் நின்றார்கள். இதற்குள் அப்பாவு, தமது அரசியல் தோழருடன், முதல்வரின் அறைக்கு வெளியே வந்து, வராண்டாவில் உள்ள சிமெண்ட் தூணில் சாய்ந்து, கையிரண்டையும் கட்டியபடி சாய்ந்து பார்த்தார். அவர் தொலைவுப் பார்வை, படிப் படியாகக் குறுகிக் கொண்டிருந்தது. அந்தப் பார்வையே சத்தம் போட்டதுபோல் திடீரென்று, போலீஸ்காரர்கள் வேனில் இருந்து குதித்தார்கள். லத்திக் கம்புகளோடு, மாணவர் கூட்டத்திற்கு முன்னால் வந்து நின்றார்கள்.

பிரபுவிற்கு வீரம் வந்தது. அப்பாவுக்கு நிமிர்வு வந்தது. பிரபு இப்போது பெளவியத்தை விட்டுவிட்டு, பயங்கரமாகக் கத்தினான். "டேய் முத்தையா..! நீ மாணவர்களைப் பகடைக் காய்களாய் யூஸ் பண்ண முடியாது. இந்த அப்பாவிகளோட படிப்பைப் கெடுக்கிறதைப் பார்த்துக்கொண்டு, நான் சும்மா நிற்கமுடியாது."

கூட்டத்தில் உருவமில்லா ஒரு குரல், ஒரு மாதத்திற்கு முன்பு பேசிய அதே குரல் ஒலித்தது.

"அப்படின்னா. உங்கார்ந்து தூங்கு இல்லன்னா போயிடு ராசா."

"டோண்ட் பீ ஸ்டுப்பிட். முத்தையா நீ மாணவர்களோட எதிர்காலத்துல விளையாடுறதை, விளையாட்டுத்தனமாய் எடுத்துக்க முடியாது."

அதே உருவுமில்லா குரல் பேசியது.

"அய்யய்யோ. அப்பாவு கார்ல இறங்குன இந்த ஒநாயோட கண்ணிரைத் துடையுங்கோ. இல்லன்னா, அதோட கண்ணிர் வெள்ளமாகி, நம்மள முழுங்கிடும்."

முத்தையா, திட்டவட்டமானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/45&oldid=558649" இலிருந்து மீள்விக்கப்பட்டது