பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 சத்திய வெள்ளம்

உங்களைச் சந்திக்கிற வரை உங்கள் ஞாபகமாகவே இருப் பேன் என்பதை நீங்களே அறிவீர்கள். தயவு செய்து மீண்டும் ஒரு முறை வருங்காலக் காதலர்களுக்குக் கவிதை யின் கடைசி ஆறுவரிகளைப் படியுங்கள்.

என்றும் உங்கள், கண்ணுக்கிணியாள் இந்தக் கடிதத்தின் கீழே என்றும் உங்கள் என்பதை யும் கண்ணுக்கினியாள் என்பதையும் சேர்த்துப் படித்த போது ஒரு புதிய நயமான அர்த்தம் கிடைப்பது போலி ருந்தது பாண்டியனுக்கு. சிறையில் மோசமான உணவு, ஆரோக்கியமற்ற சூழ்நிலை, உடற்சோர்வு இத்தனையையும் தாங்கிக் கொண்டு அன்று அவன் தெம்பாக இருந்தான். காலையில் குளிப்பதற்காக என்று அவர்களை வெளியே அநுமதித்திருந்தார்கள். அப்போது பாண்டியனும், மோகன் தாஸும் மற்ற மாணவர்களும் சந்தித்துக் கொள்ள முடிந்தது. ஒர் அண்டா வெந்நீரில் நாலுபேர் குளிக்க வேண்டியிருந்தது. சிறை அதிகாரிகள் எல்லாரும் ஏதோ பழிவாங்குவதுபோல் நடந்து கொண்டார்களே ஒழிய முறையாக நடந்து கொள்ளவில்லை. இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் சிறையில் நரகவேதனையை அநுபவிக்க வேண்டியிருந்தது. அதற்குள் நகரிலும், வெளியூர் களிலும் மாண வர் போராட்டம் வலுத்திருந்தது. மல்லிகைப் பந்தல் நகரில் ஒரு நாள் பரிபூரண ஹர்த்தால் அநுஷ்டிக்கப்பட்டது. ஹர்த்தால் தினத்தன்று மல்லை இராவணசாமியின் ஆட்கள் தெருத் தெருவாக வந்து அடைக்கப்பட்ட கடை களின் கதவுகளைத் திறக்கச் செய்ய முயன்று தோற்றார் கள். ஹர்த்தாலை எப்படியாவது தோற்கச் செய்துவிட வேண்டும் என்று இராவணசாமியும் அவர் ஆட்களும் செய்த சதிகள் பலிக்கவில்லை. விரக்தியில் அடைக்கப் பட்டிருந்த சில கடைகளின் முகப்பு விளக்குகளையும் போர்டுகளையும் உடைத்து விட்டுத் திருப்தி அடைந்து போய்ச் சேர்ந்தார்கள் இராவணசாமியின் ஆட்கள். அண்ணாச்சி, கண்ணுக்கினியாள், மல்லிகைப் பந்தல்