இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சந்தனப் பேழை
13
- நுரையருவிப் பாட்டெழுதி
- என்னபயன்? இவனைப்போல்
- மடமை கண்டால்
- என்னபயன்? இவனைப்போல்
இரைமீது பாய்ந்துவிழும்
- இளஞ்சிறுத்தைப் பாட்டெழுத
- எவனு மில்லை.
- இளஞ்சிறுத்தைப் பாட்டெழுத
தரைவைரக் கற்களுக்கும்
- தழும்புண்டு; கீற்றென்னும்
- குற்ற முண்டு.
- தழும்புண்டு; கீற்றென்னும்
நரைதிரைகள் என்பதெல்லாம்
- நமக்குண்டு; பாவேந்தன்
- பாட்டுக் கில்லை.
- நமக்குண்டு; பாவேந்தன்
- ஒருமுறை தழுவியதும்
- உள்ளத்தில் படர்வதுதான்
- உயர்ந்த காதல்
- உள்ளத்தில் படர்வதுதான்
இருமுறை படிக்குமுன்பே
- இதயத்தில் ஏறுவதிக்
- கவிஞன் பாடல்.
- இதயத்தில் ஏறுவதிக்
திருமுறை என்பதெல்லாம்
- திருநீற்றுத் தமிழ்ப்பாடல்;
- இந்நாட் டார்க்கு
- திருநீற்றுத் தமிழ்ப்பாடல்;
நெறிமுறை என்பதெல்லாம்
- நிச்சயமாய் இவனெழுதி
- நிலைத்த பாடல்.
- நிச்சயமாய் இவனெழுதி