பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

25




அமெரிக்க நாட்டுக் கால்ப்ரெயத் போலவும்
அரசியற் களத்தில் வந்து குதித்து
முரசு முழக்கும் பேரா சிரியர்.


விண்ணும் மண்ணும் போலிரு பெண்களும்
கண்மணி போலோர் அன்புச் செல்வமும்
பெற்றவர்; குடும்பக் கட்டுப் பாடு
கற்றவர்; நலத்துறை நடத்தும் அமைச்சர்.
'கோடு உயர்ந்தது: குன்றந் தாழ்ந்தது'
என்று பேரறிஞரால் ஏற்றம் பெற்ற
திருச்செங் கோட்டின் தேர்தல் வீரர்.
தூய கையர்; தொண்டு மெய்யர்.
வாழ்க அன் பழகனார் அண்ணா
நூல்களில் உள்ள எழுத்தைப் போலவே!