இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழே நீயென் தாயே!
- கணுக்களில்லாச் செங்கரும்பே!
- கவிதைத்தேன் காவிரியே!
- கண்ணே! என்றன்
- கவிதைத்தேன் காவிரியே!
அணுக்களெல்லாம் கசிந்தூறி
- ஆவியினை வளர்க்கின்ற
- அமுதே! காதல்
- ஆவியினை வளர்க்கின்ற
மணக்கவரும் பூங்காற்றே!
- மறத்தமிழர் கருத்தூற்றே!
- மாந்தர் வாழ்வின்
- மறத்தமிழர் கருத்தூற்றே!
நுணுக்கமெலாம் கருக்கொண்டு
- நோகாமல் பெறுந்தாயே!
- நீயென் தாயே!
- நோகாமல் பெறுந்தாயே!