பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

முருகுசுந்தரம்




அறிஞர் அரிஸ்டாட்டிலே! அவன்
உங்கள் காலத்திலே பிறந்தானே
அதுதான் சிறப்பு!'...என்றான்
பெருவீரன் பிலிப்.


அண்ணா!...நாங்கள்
இருபதாம் நூற்றாண்டில்
இருக்கின்றோம் என்பதில்
எந்தச் சிறப்புமில்லை.
உன் காலத்தில்
இருந்தோம் என்பதே
எங்களுக்குச் சிறப்பு!