பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




தோல்வியை மறைப்பதற்காகச் 'சீ !சீ!' இந்தப் பழம் புளிக்கும்!’ என்று ஊளையிட்டாலும், பாட்டரங்கத்தின் மரியாதை குறையவில்லை; மாறாகக் கூடிக் கொண்டு தான் இருக்கிறது.


பாட்டரங்க முத்துக்கள் சிலவும், கழக இதழ்களில் இழைத்த மணிகள் சிலவும், இத்தொகுப்புக்கென்றே பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் சிலவும் 'சந்தனப் பேழை'யில் இடம் பெறுகின்றன. பாவலர் முருகு தம் முத்திரை பதிக்காத பக்கம் இந்நூலில் இல்லை. பாவலருக்குப் பாராட்டு வழங்கியுள்ள மாண்புமிகு பண்டாரகர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு எம் நனிசிறந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, கழகக் கண்மணிகளுக்கு இத்தொகுப்பைக் காணிக்கையாக்குகிறோம்.


தி. பி. 2006
அன்புடன்
சேலம்-3
அரிமாப் பதிப்பகத்தார்