பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 அந்த சிருஷ்டியை கோரோலெங்கோ நொறுக்கித் தன்னிவிட்டார். இங்கு, மொழி என்பது மக்களால் ஆக்கப்பட்டது என்பதைச் சொல்வது பிரயோஜனகரமாயிருக்கும். இலக்கிய மொழி. யென்றும் கொச்சை மொழி பென்றும்: பாகுபடுத்துவ தென்பது, இலக்கிய மேதைகளின் கைவண்ணத்தால் மெருகு பெற்ற மொழியையும் பேச்சு மொழியையுமே குறிக்கும். இதை முதன் முதலில் உணர்ந்தவர் கவிஞர் புஷ் கினே; அவர்தான் மக்கள் பேசும் மொழியையும் பெருகிட்டுப் புதுமை பெறச் செய்ய முடியும் என்ப தைக் காட்டினார், - எழுத்தான் என்பவன் அவனுடைய நாட்டின் வர்க்கத்தின் உணர்ச்சி மயமான ஊது குழல்; அதன் செவி, கண், இதயம் எல்லாம் அவன் தான். அவன்தான் அவனது சகாப்தத்தின் குரல்! அவன் பழமையைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டுமோ அவ்வளவு தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் நிகழ் காலத்தில் தனது. சமுதாயத் தின் முன்னுள்ள கடமைகளை வரையறுக்கவும், நிறை வேற்றவும் முடியும், அவனுக்கு மனித சரித்திரம் தெரியவேண்டும். மக்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதை உணர அவர்களது பழமொழிகளையும், கதைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். நானும் அதைத்தான் செய்தேன். இளைஞர்களாகிய நீங்கள், நான் ஏன் பஞ்சைப் படையினங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று கேட்பீர்கள். கீழ்த்தர மத்தியதர வர்க்கத்தினரோடு