பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18-1-39 - தமிழர் திருநாள் உரை நிகழ்த்துதல்.

10-2-39 - சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர்

6-1-40 - பம்பாயில் பெரியார் - அம்பேத்கார் உரையாடல்: மொழிபெயர்ப்பு

2-6-40 - காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு

7-3-42 - திராவிடநாடு கிழமை இதழ் தொடக்கம்.

14-3-43 - சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர்.

5-6-43 - 'சந்திரோதயம்' நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல்.

19-8-44 - சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு - அண்ணாதுரை தீர்மானம் - நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல்.

15-12-45 - 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடக அரங்கேற்றம் - அண்ணா நடித்தல்.

மே 1946 - கருஞ்சட்டைப்படை மாநாடு - தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு

29-7-46 - நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கல்

25-4-47 - 'வேலைக்காரி' நாடகம்.

1-6-47 - 'நீதிதேவன் மயக்கம்' நாடகம்.

15-8-47 - ஆகஸ்டு பதினைந்து 'விழாநாளே' என விளக்கம் தருதல்.

28-9-47 - தந்தை பெரியார் 69வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை - 'இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்'.