பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14-1-48 - 'நல்ல தம்பி' திரையிடல்

18-6-49 - தந்தை பெரியார் - மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல்.

10-8-49 - 'மாலைமணி' - நாளிதழ் ஆசிரியர்.

17-9-49 - தி.மு.க. தோற்றம்

18-9-49 - 'திராவிட நாடு' இதழில் 4, 18-4-48 இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு. நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல். எதிர்ப்பு கண்டு பத்தாம் நாள் விடுதலை.

12-1-50 - நாடெங்கும் பொங்கல் விழா - உழவர் விழா எடுக்க அறிக்கை விடல்.

1950 - திருச்சிச் சிறையில் 'இலட்சிய வரலாறு' எழுதுதல்.

1951 - 'ஆரியமாயை' நூலுக்குத் தடை

17-9-51 - திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்தல்.

16-12-1951 - தி.மு.க. முதல் மாநில மாநாடு.

1-8-52 - சென்னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர்

15-6-53 - 'நம்நாடு' நாளிதழ் தொடக்கம்.

13-7-53 - மும்முனைப் போராட்டம் - மூன்று மாதம் சிறை

2-2-56 - தேவிகுளம், பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம்.

29-4-57 - தமிழ்நாடு சட்டமன்றத் தி.மு.கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல்.

9-6-57 - "ஓம் லேண்டு' (Homeland) ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்குதல்

2-3-58 - தி.மு.கழகத்தினை மாநிலக் கட்சியாக இந்திய அரசு ஒப்புதல் அளித்தல்.