பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24-4-59 - அண்ணாவின் தம்பியர் சென்னை மாநகராட்சி மன்ற ஆட்சியில் அமர்தல்.

1-8-60 - இந்தி எதிர்ப்பு மாநாடு செங்கையில் அண்ணா தலைமை உரை

1962 - சம்பத் விலகல் குறித்து அண்ணா அறிக்கை

26-2-62 - சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராதல்.

2-8-62 - விலைவாசி உயர்வுப்போர் - வேலூர் சிறையில் பத்து வாரம்.

17-11-63 - கட்டாய இந்தி-17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல் 16-11-63 அன்றே கைதாகி, ஆறுமாதம் சிறைத்தண்டனை ஏற்றல்.

1-3-67 - தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் 138 பேர் தம்பியருடன் அண்ணா தமிழக முதல்வர் ஆதல்.

14-4-67 - 'தமிழ்நாடு' பெயரிட்டுப் பெருமை பெறல்

10-1-68 - இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்தல்

8-9-68 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குதல்

4-1-69 - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கடைசிச் சொற்பொழிவு.

2-2-69 - புகழ் உடம்பெய்தல்.