17
வாஞ்: நிறுத்துடா! நானும் கொஞ்சம் படிச்சிருக்கேன். சாம்பசிவம் — இவனுகளோட சேர்ந்து வீணா கெட்டுப் போகாதே.
சாம்: அது எனக்குத் தெரியும். நீர் சொல்ல வேண்டியதில்லை.
வாஞ்: உன் அப்பா ஆவி அந்தரத்துல அலையுது.
தங்க: அரிசி, பருப்பு காய்கறியா கொட்டிக்கொடு.
கோத: அவிச்சுத் தின்பான்.
சாம்: இப்போது நீர் மரியாதையாகப் போகப் போறீரா இல்லையா?
வாஞ்: போகலேன்னா என்னடா செஞ்சிடுவேள்.
சாம்: என்ன செய்வோமா? (அடித்து துரத்துகிறார்கள். அலறுகிறார் ஐயர்)
வாஞ்: வேதம்மா! வேதம்! வேதம்!! இங்க வாயேண்டி
வேதம்: (வந்து) டே ! சாம்பசிவம். இவரு நம்ம புரோகிதர்டா.
வாஞ்: நல்லா சொல்லேண்டி.
தங்க: பாத்தியாப்பா, உன் அம்மாவை அவ இவன்னு பேசுறான் மரியாதை இல்லாம.
சாம்: ஏய்! மரியாதையாகப் பேசு, தலையை திருகி எறிந்து விடுவேன். ஜாக்கிரதை.
வேதம்: உன் அப்பா இறந்ததற்கு திதி கொடுக்க வந்திருக்காரப்பா ஐயரு.
சாம்: அம்மா, என் தகப்பனார் இறந்த கவலை எனக்கும் உங்களுக்கும், இவனுக்கு என்ன?
வேத: அய்யய்யோ. கழகத்துல சேர்ந்து கெட்டுப் போயிட்டானே. மாரியாயி — நீதான் காப்பாத்தணும்.
வாஞ்: பிறாமணாளுக்கு மரியாதையே இல்லையே. வேதம்மா நான் சாபமிட்டா உன் மகன் விளங்க மாட்டான்.
வேதம்: உங்க வாயினால் ஒன்றும் சொல்லாதீங்க சாமி.
சந்-2.