20
வேத: என் மகன் அப்படியெல்லாம் பேசாதீங்க சாமி.
வாஞ்: தங்கவேலு என்னென்ன பேசினான். நீயாவது கண்டிச்சியோ?
வேத: அவனுகளோட சேர்ந்துதான் இவனும் கெட்டுப் போயிட்டான்.
வாஞ்: இந்த வாஞ்சிநாத சாஸ்திரிய அடிச்சானே. அடிக்கலாமா? நீ பொண்ணு! நீயே சொல்லு. நான் சாபம் போட்டா என்ன ஆகிறது.
வேத: பெத்த வயிறுங்க சாமி. அப்படியெல்லாம் ஒன்னும் சொல்லிப்பிடாதீங்க.
வாஞ்: பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு!அதுசரி... திதிய எப்படியும் செய்யணுமே. ஏதாவது பணம் இருக்கா இப்போ?
வேத: அஞ்சு ரூபாதான் சாமி இருக்கு.
வாஞ்: சரி ......... கொடு. கோயிலிலேயே செய்துடுறேன்.
வேத: செலவுக்கு இதுதானுங்க இருக்கு. இந்தாங்க. (ஐயர் வாங்கிக் கொள்கிறார்)
வாஞ்: பையன் ஒரு வாரத்துல வந்துருவான், நான் வரட்டுமா ? (போகிறான்)
—★—
- [தேனுறும் தமிழ் மாநாடு--ரிக்கார்டு இசை
- உழைக்காது வஞ்சகத்தன்மை- பிச்சைக்காரன் பாட்டு.]
- [சிவன் கோவில் வாசலில் பிச்சைக்காரன் உட்காருகிறான். வாஞ்சிநாதர் - சிங்காரவேலர் மற்றும் சிலர் வருகின்றனர்]
வாஞ்: இதுனால ஒண்ணும் நடக்காது. பயகல கையக்கால ஒடிக்கணும்.
சிங்: இன்னைக்கு அடிச்சா நாளைக்கு? பயக பெரிய இடத்துப் பயக.