பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

மடாதி: சபாஷ்! குலம்?

சிஷ்: பிரம்ம குலம்!

மடாதி: பூங்கொடியோ?

சிஷ்: வஞ்சிக்கொடி!

மடாதி: நஞ்சல்லவே?

சிஷ்: அமிர்தமல்லவா.

மடாதி: அருந்தலாமா!

சிஷ் : தடையேதுமில்லை. தாராளமாக!

மடாதி: பெயர்!

சிஷ்- லலிதா!

மடாதி: அழகான பெயர்! வசந்த மண்டபத்தில் எல்லாவித சௌகரியமும் இருக்கும். என்ன இருந்தாலும் இந்த சடையும் முடியும் தான் சற்று தொல்லை கொடுக்கும் சரி—வஸ்து தனியாகவன்றோ இருக்கும்

சிஷ்: ஆமாம்--சென்று வாருங்கள்.

மடாதி: செலவுக்கு!

சிஷ்: பெற்றுக்கொண்டேன்.

மடாதி: தாராளமாக செலவு செய்

சிஷ்: புதிய பாத்திரம் பக்குவமாக கையாள வேண்டும். சென்று வாருங்கள்.

—★—


[வாஞ்சி நாதரிடம் கோபத்துடன் தாய்வீடு வந்த லலிதா மடாதிபதி தாபத்தை தணிக்க முன் வருகிறாள்]
(லலிதாவிடம் சிஷ்யன்)

சிஷ்: வலிதா உன் சாமர்த்தியத்தைத்தான் நம்பி இருக்கிறோம்.

லலி: அதைப்பற்றி கவலை வேண்டாம்.

சிஷ்: நீ நம்ப வேண்டுமே.

லலி: நானும் நம்பித்தான் வந்திருக்கிறேன்.

சிஷ்: தம்பிரான் தொட்டால் பொன் பூக்கும் உடலாகும்.

லலி: ஆனால் என் குடும்பத்தார் என்னை நினைத்தால்.....

சிஷ்: இரண்டு இரவு ஒரு பகல் தானே லலிதா!

லலி: ஊம்!...சரி.

சிஷ்: ஜாக்கிரதையா யிரு

லலி: சரி

சந்-3.