34
சிஷ்: தம்பிரான் கண்ணோடு புதைய வேண்டும்.
லலி: சரி! பார்க்கிறேன்.
சிஷ்: அதோ தம்பிரான் வருகிறார், (சிஷ்யன் மறைகிறான்)
மடாதி: வர்ணனையை விட வஸ்து நன்றாகவே இருக்கிறது. உட்கார். உன்னை பார்த்து என் கண் பூரித்து விட்டது.
லலி: ஏன் இவ்வளவு தாமதம்?
மடாதி: காலையெல்லாம் சைவத்தைச் சுமந்து நொந்தேன், கட்டழகி! மடத்திலேயோ மன்னார்சாமிகள் வருவதும் போவதும் ஓயவில்லை.
லலி: கனிரசம் அருந்துகிறீர்களா?
மடாதி: உன் பவழ வாயை விடவா இது சுவைக்கும்? உன் இதழோரத்தில் நெழிந்தோடும் ரசத்தை விட கனிரசமா ருசியாயிருக்கும்?
லலி: ஏதாவது பாடட்டுமா?
மடாதி: பாடு.
- (மணவாளன் இவர்தானடி- பாடல்)
மடாதி: திவ்யமான சாரீரம்! எங்கடி சிட்க்ஷை?
லலி: பண்ணையூர் பார்த்தசாரதி அய்யங்காரிடம் ஐந்து வருஷம் சிட்க்ஷை பெற்றேன்.
மடாதி: ஓ! அவருக்கு ஒரு மகள் கூட உண்டு.
லலி: நல்ல சிவப்பு.
மடாதி: உன்னை விடவா! நீ தான் முதல்! ரகம்!
லலி: எல்லாம் இப்படி விடியும் வரைதான் விளையாடுவோம்.
மடாதி: ஏன்?
லலி: இன்னும் மூன்று நாட்கள் தான் இந்த ஊரில் இருப்பேன். தாய் வீட்டில் அதிக நாள் தங்கக்கூடாது! பிறகு அவர் வீட்டிற்கு போனால் மூன்று மாதமோ- ஆறு மாதமோ!
மடாதி: நான் அங்கு வருகிறேன்.
லலி: வேண்டாம்! அது ஒரு மாதிரியான ஊர்!
மடாதி: அப்படியா!
லலி: என் இஷ்டத்தை பூர்த்தி செய்வீர்களா!
மடாதி: கரும்பு தின்னக் கூலியா!
—★—