44
வாஞ்: பெரிய மனுஷ்யாளண்ட கேட்பதாவது.ஏன் ஓய் நீர் வைஷ்னுவா தானா?
விஷ்: ஆமா ஓய்! என்ன கெடச்சது அதைச் சொல்லும்.
வாஞ்: உம்மகிட்ட கெடச்சத சொல்றதுல தோஷமில்ல. ஆயிரம் கெடச்சது ஓய்!
விஷ்: ஆயிரமா!? பிறாமணாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவு?
வாஞ்: ஆள் ஒண்ணுக்கு அஞ்சு ரூபாய்க்கு குறைவிருக்காது எத்தனை வகைவகையான பொரியல்! நெய் விட்டாங்க பாரு! அப்படியே கையினாலே வாங்கி குடிச்சோம்.
விஷ்: ஆத்துக்கு எவ்வளவு கொண்டு வந்தேள்?
வாஞ்: ரெண்டுவீசை நெய் வீட்டுக்கு வாங்கி வந்தேன்.
விஷ்: உனக்கு என்ன ஓய் முதலியார் ஆம்புட்டார். சைவம்ல!
வாஞ்: சும்மா இரும் ஓய்! எங்களுக்கு விஷ்ணுவைரின்னோ !
வீஷ்: எங்க விஷ்ணுவைப்பற்றி பேச வந்துட்டீரே. சிவனுக்கு என்ன ஓய் யோக்கியதை இருக்கு?
வாஞ்: கோகுலத்துப் பெண்களோட மானத்த கெடுத்தவன் தானே விஷ்ணு!
விஷ்: தாருகாவனத்து ரிஷிகளோட பத்தினிகளைக் கெடுத்தவன் தானே உம்ம சிவன்.
வாஞ்: உங்க கிருஷ்ணன் சேலைகளைத் திருடினானே.
விஷ்: உம்ம சிவன் பார்வதி இருக்கச்சே கங்கையை தூக்கி வெச்சுண்டு ஆடினானே.
வாஞ்: உம்ம கிருஷ்ணன் வெண்ணைய திருடினானே.
விஷ்: உம்ம சிவன் விஷம் சாப்பிட்டானே.
வாஞ்: ஓய் வரதாச்சாரி! உங்களை காப்பாத்தத்தானே ஓய் எங்க சிவன் விஷம் சாப்பிட்டாரு. என்ன? நீர் இந்த சுயமரியாதைக்காரங்க மாதிரி பேசுறீர்.
விஷ: உம்ம சிவன் பிள்ளைகறி சாப்பிட்டாரே ஓய்! மகா கேவலம். உமக்கு வெட்கமா இல்ல?
வாஞ்: இங்க வாரும் ஓய்! மகாவிஷ்ணு வராகவதாரம் எடுத்தாருல அதுக்கு என்ன ஓய் ஆகாரம்!
விஷ்: என்ன ?
வாஞ்: வராகவதாரத்துக்கு என்ன ஆகாரம்னேன்?
விஷ்: என்ன ஓய் உமக்கு வாய் துடுத்துப் போச்சு!