57
சிங்:உண்மைதான் இந்த ஊர் கோயில் தர்மகர்த்தா.
மா: தாங்கள் தானும். ஆனால் தங்கள் பக்தியும் பிராமண சேவையும் தங்களுக்கு ஒரு பயனும் தரக்காணோமே. தங்கள் மகள் சந்திரா-பாவம் தாலி அறுத்துவிட்டாள்...
சிங்: ஆமாம்! தலைவிதி.
மா: அந்தத் தலைவிதியைக்கூட உமது பக்தியும் பிராமண சேவையும் போக்க முடியவில்லை. பிறகு என்ன பிரயோஜனம்?
சிங்: இதைப்போலதான் பேசுவான் துரைராஜ்.
மா: அவனைத்தான் அடித்து துரத்தியாச்சே.
சிங்: ஜெமீன்தார்வாளுக்கு அவனைத் தெரியுமோ?
மா: ஏன் தெரியாது. துரைராஜ் இப்போது உம்மைப்பார்த்தால்......
சிங்: காரி உமிழ்வான்.
மா: துரைராஜ் அப்படிப்பட்டவனல்ல. உம்மிடம் பரிதாபம் காட்டுவான் . சிங்: துரைராஜ் பேசுவது போலவே இருக்கிறது.
மா: இருக்கட்டும் நானேதான் துரைராஜ் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
சிங்: என்ன?
மா: ஒப்புக்கு!
வெள்ளை: (வந்து) எசமான். வாஞ்சிநாதர் சாஸ்திரி வந்திருக்கிறார்.