58
சிங்: வாஞ்சிநாத சாஸ்திரியா இங்கு எதற்கு வந்தான்?
மா: பார்ப்பணணை நம்பியிருந்தீரே. பாரும் அவன் புரட்டை வாஞ்சிநாதரின் வஞ்சகம் எந்த அளவுக்குச் செல்கிறது என்பதைக் காட்டுகிறேன். அதோ அந்த திரைக்குப் பின்புறம் சந்தடி செய்யாமல் இருந்துகொண்டு நாங்கள் பேசுவதைக் கேளும். (போய் மறைந்து கொள்கிறார் சிங்காரவேலர் )
மா: (வெள்ளையிடம்) வரச்சொல்.
வாஞ்: (சிரித்தபடி) நமஸ்காரம் ஜெமீன் தார்வாள்! ஆத்துல குளிச்சுண்டிருந்தேன்
வெள்: எசமான்! பொய்! பொய்! வீட்டுலதான் குளிச்சுக்கிட்டிருந்தார்.
வாஞ்: ஜெமீன்தார்வாள் கூப்பிட்டதா வந்து சொன்னான் ஓடி வந்தேன்;
மா: என்ன வாஞ்சிநாதரே! வாரம் இரண்டாகிறது. நம்ம விஷயத்தை மறுந்துட்டீரே,
வாஞ்: எதைச் சொல்றேள் ஜமீன்தார்வாள்.
மா: சந்திரா விஷயம் தானைய்யா.நான் குறி வைத்தால் தப்பக்கூடாது
வாஞ்: சற்று சிரமமாக இருக்கிறது.
- (உள்ளேயிருந்து சிங்காரவேலர் உறுமுகிறார்)
வாஞ்: என்ன சப்தம்?
மா: ராஜபாளையத்துலேயிருந்து ஒன்னு கொண்டாந்திருக்கு அது !
வாஞ் : ஓஹோ!
மா: என்னய்யா இழுத்துப் பேசுகிறீர் இரண்டு கைகளையும் நீட்டி ரூபாய் இரண்டாயிரம் வாங்கியிருக்கிறீர். நானும் சிங்காரவேலர் இல்லை ஏமாறுவதற்கு.
வாஞ்: நான் மறுப்பேனா?
மா: என்னய்யா - என்னைவிட அந்த சிங்காரமுதலி மேலானவனா?