- [வாஞ்சிநாதர் வீட்டிலுள்ள நகைகளை காண்பிக்கிறார் மாயேந்திரன் சிங்காரவேலருக்கு]
மா: பார் துரைராஜ் களவாடிக்கொண்டு ஓடிவிட்டதாக போலீஸில் புகார் செய்தீரே- அந்த மாங்காய் மாலை.
சிங்: ஒரு குற்றமும் செய்தறியாத துரைராஜின்மேல் அநியாயமாக பழிசுமத்திவிட்டேனே. முதலில் துரைராஜ்காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும். ஆ! திருவாபரணங்கள். ரசவாதத்தின்போது களவுபோனவைகள்.
மா: மாங்காய் மாலை கிடைக்குமென்றுதான் அழைத்து வந்தேன். இவைகளும் இங்குதான் இருந்திருக்கின்றன. ஆனால் இனியும் வாஞ்சிநாதரைப் போன்ற வஞ்சகர்கள் வலையில் சிக்காமல் வாழுங்கள்.
சிங்: இனி நாள் வஞ்சகத்துக்கு அடிமையாக மாட்டேன். வைதீகத்துக்கு இடமளிக்கமாட்டேன் பார்ப்பனியத்தைப் பாதுகாக்க மாட்டேன். பகுத்தறிவு பரப்புவேன். ஜாதிவேதம் ஒழியட்டும். மூட நம்பிக்கை ஒழியட்டும் ! புரட்டர்களின் கொட்டம் அழியட்டும்.
மா: செல்வந்தான் சீரழிக்கும்.
சிங்: இனி உங்கள் அடிமை நான். என்னை தாங்கள் சீட னாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
மா-சீடர்கள் சூழ இருந்தேன் ஒரு காலத்தில் மடத்தில். ஆனால் உங்களுடைய மாறுதல் துரைராஜுக்கு மகத்தான வெற்றி! நீங்கள் திருந்தி விட்டதை வாயளவில் நான் நம்பத்தயாராயில்லை. அதற்கு ஒரு பரீட்க்ஷை செய்து பார்க்கபோகிறேன்.
சிங்: என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்.
மா: சாம்பசிவத்துக்கு தங்கள் மகள் சந்திராவை திருமணம் செய்துவைக்க தாங்கள் சம்மதிக்க வேண்டும்.
சிங்: ஊர் ஒப்புக்கொள்ளவேண்டுமே.
மா: நெற்றியில் விபூதி பூசினால் சரி - பக்தனென்றும் ஊர் நம்பிவிடுமோ? வாஞ்சிநாதரைப் போல் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
சிங்: ஆமாம்.
மா: தாங்கள் புத்துலகக் கழகத்தில் சேர்ந்து முதலில் கல்யாணத்தை நடத்த ஏற்பாடு செய்புங்கள்.
சிங்: தங்கள் விருப்பம்போலவே செய்கிறேன்.
—★—