பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சபாபதி முதலியாரும், பேசும் படமும் பா. கோ. நமஸ்காரம் (போகிருர்) வே. ச. ஏம்பா அவருக்கு பால பார்ட் குடுக்கறதா யிருந்தா இவர் ஆறடி யிருக்கிருரே அவர் தகப்பனர் பத்து அடி இருக்கிறதா ஒருத்தரை பிடிக்கணும். ச. மு. (சிரித்துக் கொண்டே) சரிதாண்ட படுகாளி (மணியை அடிக்கிருர்) (கோகில கோமளம் வருகிருள்.) கோ. கமஸ்காரங்க. ச. மு. வாம்மா உட்கார். நீ யார் தெரியலேயே. சோ. நான்தான் கோகில கோமளம்-காயிதம் அனுப்பிச் சேனே. ச. மு. ஒ-காயிதம் வந்துது அத்தோட படம் அனுப்பிக்கலே போலே யிருக்குதே. கோ. இல்லங்க, ச. மு. பரவாயில்லை. நீ அநேகம் அயன் ஸ்திரி பார்ட் ஆக்ட் பண்ணியிருக்கிறதா சொல்லி யிருக்கறயே அதுகளி லெல்லாம் நீ ரொம்ப பேர் எடுத்தது எதிலே, கோ. சந்திரமதி வேஷத்தலே வே. ச. ஏம்பா சந்திரமதி வேஷத்துக்குச. மு. டேய் பேசாதிரு அப்போ சோகமான பாத்திரம்தான் உங்களுக்கு பிடிக்கும்போலே யிருக்கு. கோ. ஆமாங்க சோக பாகத்திலேதான் ரொம்ப பேர் எடுத் தேன். வே. ச. அதென்ன ரஸம்பா சோகரளம். ச. மு. சோகர ஸ்ம்ன அழறதுண்ணு அர்த்தம்-ஏதோ சோக ரஸமான பாட்டுலே ஏதாவது பாடம்மா கேக்கலாம். கோ. இப்போ பக்க வாத்தியம் ஒண்னும் இல்லேங்களே தொண்டையும் கொஞ்சம் கம்மலா யிருக்கிறது.