பக்கம்:சமணமும் தமிழும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணமுனிவர் ஒழுக்கம்

27


வும் தின்னவும் குளிக்கவும் தாம்பூல சேவை முதலாயின பண்ணவும் புகுவோமாகில் ஆர்ஜன ரக்ஷணாதி (ஆக்கல் காத்தல் முதலிய) வியாபாரங்களால் கொலை முதலாயின பாவங்களும் ஞானத்தியான விக்கினங்களுமாதலின், சக்தி தத்ஸ தியாக தபஸி (சக்திக்குத் தக்கபடி கொடையுந் தபசும்) என்பது எம்மோத்தாகலின், சத்தியை அதிக்கிரமித்து அநசனாதிகள் செய்வதுமில்லை. வெய்யினிலை முதலாயினவும் வனசரராய் நின்று சகல வியாபாரங்களும் துறந்து ஒருவழி நிற்றல் இருத்தல் செய்து ஞான தியானங்கள் பயில்வுழி வெய்யிலும் மழையும் காற்றும் முதலாயின வந்தால் அவற்றைச் சந்திக்குத் தக்கவாறு பொறுத்தாம். என்னை?

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. (குறள் : ௨௬௧)

என்பது எம்மோத்தாகலின், தாமே வந்தன பொறுத்தலல்லது வெய்யில் முதலாயினவற்றுள் வருந்துதலே தவமென்று சொன்னோமோ? இல்வாழ்க்கைக்கண் நின்றாரும் இல்வாழ்க்கைக் காரியங்களுள் ஒன்று செய்வுழி ஒழிந்த காரியங்கள் துறந்து கிருஷி முதலாயின செய்ய, அவ்வழி வந்த வெய்யில் முதலாயினவும் சக்திக்குத் தக்கவாறு பொறுப்பதற்காக‍க் காயம் வருந்தினாராவரோ?"

(மொக்கல, 87-ஆம் பாட்டின் உரை)

இதுகாறும் கூறிய இவை பதிதர்மம் ஆகும், அதாவது சமணசமயத் துறவிகள் ஒழுகவேண்டிய முறையாகும்.