பக்கம்:சமணமும் தமிழும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் சிறப்படைந்த வரலாறு 45 நூல்களை மற்றவர் படிக்கக்கூடாது, ஓ.தவதைக் கேட்க வும் கூடாது என்றும், அப்படிச் செய்தவர் காக்சையறுக்க வேண்டும், காதில் ஈயத்தைக் காய்ச்சி உருக்கி ஊத்தவேண் டும் என்றும் தடைகளையும் தண்டளைகளையும் ஏற்படுத்திக் கொண்டது போல் அல்லாமல், பரந்து விரிந்த மனப் பான்மையும் பெருந்தன்மையும் உள்ள சமணர்கள் தமது மத மால்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளிலே எழுதி ஞார்கள். அதன்படி, தமிழிலேயும் பல கால்களை இயற்றி ஞார்கள். இதனால் தமிழ் நாட்டில் சமணசமயம் செழித் தோங்கத் தொடங்கிற்று, மக்கள் அறியாதபடி வேறு மொழியில் மதக்கொள்கை களை மறைத்துவைப்பது மன்னிக்கமுடியாத பெருக்குத்தம் என்றும் பெரும்பாவம் என்றும் சமணர் கருதினார்கள். ஆகவே, அவர்கள் தம் மத நூல்களை மக்கள் பேசுகிற தாய் மொழியிலே எழுதினார்கள். இதனைச் சமணசமய வரலாறு ஒன்று ஈன்கு விளக்குகிறது. உச்சைனி தேசத்து அரசனறு அவைக்களத்திலே, வடமொழியைக் கற்றுத் தேர்ந்து பெரும்புகழ் பெற்று விளங்கிய சித்த சேன திவாகரர் என்னும் பிராமணர் ஒருவர் இருந்தார். அதே காலத்தில், இவரைப் போலவே கல்விச் கடகக் கரை கண்டவர் என்னும் புகழுடன் வாழ்ந்து வந்த விருத்தவாதி முனிவர் என்னும் சமணத் துறவி ஒருவர் இருக் தார். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நேரில் கண்டு வாதம் செய்து, தம்மில் பார் அதிகமாகக் கற்றவர் என்று அறியப் போவாகொண்டிருந்தனர். செகொள் சென்ற பிறகு, இவர் ஒருவரையொருவர் காணும் படி நேரிட்டது. இருவரும் வாதம் செய்யத் துணிந்து, வாதத்தில் தோற்றவர் வென்ற வருக்குச் சீடர் ஆகவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு வாறு செய்யத் தொடங்கினர். அவ்வூர்ப் பொது மக்கள் அவர் வெற்றி தோல்வியைச் சொல்ல சடுதிலயாள சாக இருந்தார்கள், சித்தசேன திவாகார் தமது வடமொழி வல்லமையைப் புலப்படுத்த எண்ணி வட மொழியில் வாது செய்தார். விருத்தவாதி முனிவர், வட மொழியில் ஈன்கு