பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

14 வாழவும், கட்டாயமாக ஆனால் நம்மால் முடியுமா?" இனி மனிதராய் வேண்டும். கேட்டனர், விடுதலை என்று விடுதலை வேண்டும் என்று மனம் கட்டளையிட்டுவிட்ட பிறகு மறு கேள்வி ஏது? அவர் கேட்டார். "அவர்கள் பலசாலிகள் * மக்கள் கூறினர். "நாம் பலம் பெறவேண்டும். பெறுவோம்" அவர் உரைத்தார், உறுதியுடன் " "சிறையிலே தள்ளுவார்களே”- என்றனர் மக்கள். "தள்ளுவர்-ஆனால் இப்போது உள்ள இடமும் இறைதான்: இது பெரிய சிறை" அவர் பதில் சொன்னார் நகைச் சுவையுடன். தடியடி,துப்பாக்கி, தூக்குமேடை, அந்தமான் தீவு என்பன போன்ற எத்தனையோ ஆபத்துக்கள் அடுத் தடுத்து வரும்-உரிமைப் போரிலே உள்ள ஆபத்துக்களை அவர் ஒளிக்காமல், குறைக்காமல் கூறினார். இவ்வளவையும் நான் பொருட்படுத்தப் போவதில்லை- மரண நாமின்றி இக்காரியத்திலே ஈடுபடத் தீர்மானித்து விட்டேன் - ஆயுத பலத்தை நம்பி அல்ல; மன உறுதியை நம்பி - நாம் நமது பிறப்புரிமைக்காகப் போராடுகிறோம். இது தர்மம் என்ற பலத்தை நம்பிப் போரைத் தொடுக் கிறேன் என்றார்; தொடுத்தார். வயலோரத்திலிருந்து வாட்டமுற்ற உழவன் முதற்கொண்டு, வசீகர வாழ்விலே இருந்துவந்த சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை வரையிலே. அவர் முகாமில் வந்து குமிந்தனர். வேறு நாடுகளிலே விடுதலைப் போர் தொடுத்தவர்கள் இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ சொந்தத்திலேயோ, வேறு நாட்டின் துணைகொண்டோ, இரானுவத்தைத் திரட்டுவது; போர்ப் பொருளைக் குவிப்பது; மறைந்திருந்து தாக்குவது: சதி செய்வது என்ற பல முறைகளைக் கை யாண்டனர்.தாய் நாட்டின் விடுதலைக்காக இவையாவும். எனவே, சரியா? தவறா? என்ற கேள்விக்கும் இடம் இல்லை என்றனர்.