பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

16 நஷ்டமும் மனக் கஷ்டமும் நெஞ்சை வெந்திடச் செய்யு மல்லவா? அதுபோலக் காந்தியாரைக் கயவன் கொன்ற போது, அவருடைய மனதிலே அருமையான திட்டங்கள், நாட்டுக்கு நலன் தரும் புதிய முறைகள். ஊசலாடிக் கொண்டிருந்தன. அதை எண்ணும் போதுதான் எவ் வளவு பெரிய நஷ்டம் இந்தச் சம்பவம் என்பது விளங்கு கிறது. இல்லவர் விடுதலை பெற்றுத் தந்ததோடு வேலை முடிந்தது என்று அவர் முடிவுகட்டவில்லை. நாட்டை மீட்கவேண் டும் - நல்லாட்சி அமைக்கவேண்டும் - மக்களை களாக்கவேண்டும் - வீரம் -- திறம், விவேகம், மூன்றையும் விரும்பினார். மக்களை நல்லவர்களாக்கவேண்டும் என்பதே அவருடைய இறுதி இலட்சியம். நல்ல மனிதர்களால்தான் நல்லாட்சி நடத்தமுடியும். நாட்டுக்கு விடுதலையும் கிடைத்து மக்கள் நல்லவர்களாகாமல், கொலை பாதகர்கள். கொள்ளைக்காரர்கள், ஆதிக்க வெறியர்கள். ஆள் விழுங்கி கள், ஆஷாடபூதிகள். ஆகியோரின் ஆதிக்கம் அழிந்து படாதிருந்தால், விடுதலையால் என்ன பலன்? வேடனிட மிருந்து மீட்டுவந்த புள்ளிமானை: வேங்கையின் முன்பு துள்ளி விளையாட விடுவதா? இதை எண்ணினால், நாடு விடுதலை பெற்றதும், நல்லாட்சி அமைக்கும் வழிவரை கூறி அந்தப் பொறுப்பை உடனிருந்தோரிடம் தந்தார். மக்களை நல்லவர்களாக்கும் நற்பணி புரியலானார். நல்ல மனிதர்களெல்லாரும், திடீர் திடீரென்று பொல் லாத செயல்புரியக் கிளம்பியது கண்டார். மனம் மிக் நொந்தார். மனிதனுக்குள் இருக்கும் மிருகம் வெளிப்படக் கண்டு, மிகவும் வேதனைப்பட்டார். இந்தச் சூழ்நிலையை மாற்றியாகவேண்டும் என்று தீர்மானித்துப், பணி புரிய லானார். அந்த அரும்பணியாற்றுவாயிலேதான் அறியாய மாய்க் கொல்லப்பட்டார். நாட்டை மீட்க ஒரு ரணகளச் சூரரையும், நல்லாட்சி அமைக்க பல கலைவாணரையும் மக்களை நல்வழிப்படுத்த அறநெறி கூறுவோரையம் நாடீயாகவேண்டும். எந் நாட்டுக்கும் அனைவரும் ஏ சாலத்தில் கிடைக்க மாட்டிலி