பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

17 கள். ஒருதலைமுறையிலே வீரன்தோன்றி விடுதலைதருவான். மற்றோர் தலை முறையிலே நிபுணர் தோன்றி நல்லாட்சி அமைப்பார். பிறிதோர் சமயம் பேரறிஞர் தோன்றி மக்களுக்கு நல்வழி காட்டுவார். உத்தமர் காந்தியாரின் உள்ளம், இந்த மூன்று பண்பு களையும் ஏக காலத்தில் ஒன்றுக்கொன்று குறையாத அளவில் கொண்டு இருந்தது. மூன்று தலைமுறைகள், மூன்று தனித்தனித் தலைவர்கள் கொள்ள வேண்டிய குணத்தை, அவர் ஒருவர் கொண்டிருந்தார். லாற்றிலே இதற்கு வேறு ஈடு கிடையாது. விடுதலை வாங்கித்தந்தவர்கள் உண்டு- போர்த்திறனால்! நல்லாட்சி நிறுவியவர்கள் உண்டு- அறிவின் மேம்பாட்டினால் மக்களை நல்லவர்களாக்கினவர்கள் உண்டு- தூய்மையினால். உகை வர மூன்று அரும் பணிகளையும் ஒருசேரச் செய்த ஒப்பற்ற சிறப்பு. உத்தமர் காந்தியார் ஒருவருக்கேதான் உண்டு. நாடு விடுதலை பெற் அன்னியருடன் போராட வேண்டி இருந்தது - செய்தார் : வெற்றி பெற்று நாட்டுக் குச் சிறப்பை வாங்கித் தந்தார். நல்லாட்சி நிறுவுவதற்காகத் திட்டங்களை நிபுணர் களைக் கொண்டு தீட்டவேண்டும் - அந்தக் காரியத்தை நடத்த, அகிலம் அறிந்த பண்டித நேரு இருக்கிறார் என்ற களிப்பும் நம்பிக்கையும் கொண்டார். மக்களை நல்லவர்களாக்குவதற்கு அவர்கள் மனதிலே உள்ள மாசுகளைப் போக்கவேண்டுமே மக்கள் மனதிலே பல காலமாக மூண்டு போய்க் கிடக்கும் மதவெறி, அதன் கிளைகளான பேதபுத்தி, வகுப்புத் துவேஷம், கொடுமை ஆகியவைகளைக் களைந்தாக வேண்டும். மக்கள் மனதிலே