பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

நாடகத்திலே மறுமலர்ச்சி நாட்டிலே இதுபோல பல்வேறு துறை களிலேயும் மறு மலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. புதியதோர் நிலைக்கு நாடு தள்ளாடித் தள்ளாடி, ஆனால் நிச்சயமாக சென்று கொண்டிருக்கிறது. புதிய நிலையை அடைந்தால் நம் நாடு. உலகிலே முன்னனியில் உள்ள நாடுகளிலே ஒன் றாக முடியும் என்ற நம்பிக்கைக் கொண்டவர்கள். இந்தத் திருப்பணியில் ஈடு பட்டிருக்கிறார்கள். இன்று எந்தத் துறையைக் கவனித்தாலும் குமுறலும் கொந்தளிப்பும் தெரிகிறது - அச்சம் சிலருக்கு, சந்தேகம் பலருக்கு, மிக மிகச் சிறுபான்மையினருக்கு மட்டுமே தெரிகிறது புதிதாக ஓர் நிலை நாட்டுக்கு உருவாகிக்கொண்டு வருகிற உண்மை. வெடித்துக் கிடக்கும் வயல், படர்ந்து போகும் நிலையில் உள்ள விளக்கு, பட்டுக் கொண்டே வரும் நிலையில் உள்ள மரம் உலர்ந்துகொண்டு வரும் கொடி, வற்றிக் கொண்டி ருக்கும் குளம் இவைபோல, சமுதாயத்தில் நிலையும் நினைப்பும் நடவடிக்கையும் ஆகி விடும்போது, இந்த அவல் நிலையைப் போக்கியாக வேண்டுமென்ற ஆர்வமும் போக்க முடியும் என்ற நம்பிக்கையும் போக்கக் கூடிய அறிவாற்ற லுங் கொண்ட ஒரு சிலர் முன் வருகிறார்கள். அறிவுப்பண் ணைக்குப் பணியாற்ற அவர்களை நாடு வரவேற்பதில்லை நை யாண்டி செய்யும்! மதிப்பளிப்பதில்லை - மாச்சரியத்தை வாரி வீசும் துணை புரிவதில்லை; தொல்லை தரும்! எனினும், அந்த ஒரு சிலர் ஓயாது உழைத்து: சலிப்பு, கோபம், வெறுப்பு, பகை என்னும் உணர்ச்சிகளுக்குப் பலியாகி விடாமல் புன் னகையும் பெருமூக்கம் கலந்த நிலையில் பணி புரிந்து பட்ட மரம் துளிர் விடும் வரை, படர்ந்து போக இருந்த விளக்கு மீண்டிம் ஒளி விடும்வரையில் பாடுபட்டு, வெற்றி எண்டு மறுமலர்ச்சியை உண்டாக்கி வைக்கிறார்கள். உள்ளது சரியில்லை, போதுமானதாக இல்லை, அல்லது பயனில்லை, என்று தோண்றும்போது, உள்ளதைத் திருத்து