பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

சுதந்தர இந்தியாவில் வாலிபர் தேவை வாலிபர்கள் உரிமைப் போர்ப்படையில் ஈட்டி முனைகள். அவர் தம் உள்ளத்தில் புரட்சிப் புயலிருக்கும். வாழ்க்கை எனும் பொய்கையிலே, விசாரம் என்னும் நஞ்சு கலக்கப்படாத் பருவம். பகுத்தறிவு எனும் பகலவன், ஏறிபட்டு விஷப் பூச்சிகள் போன்ற சுயநல சுகக் கருத் துக்கள் அழிக்கப்பட்டிருக்கும்; தூய்மையாண வாலிப உள்ளங்களில். அந்த சந்தனக் காட்டைக் கடந்து மணமும் குளிர்ச்சியும் மருவி மக்களை மகிழ்விக்க வருகிறதே தென்றல், அது போன்றது வாலிபம். மாயா வாதமும், மனமருட்சியும் வானீபர்களிடம் நெருங்க நடுங்கும். வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் தீரன் வீணரின் கொட்டத்தை அடக்கியாக வேண்டும் என்ற வீரம், ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் அநீ தியைக்கண்டால் கொதித்தெழுந்து தாக்கும் பண்பு, வாலிபர்களிடயே மிகுந்திருக்கும். முடியுமா? காலம் சரியா? போதுமான பலம் இருக்கிறதா? நாளைவரை பொறுத்திருக்கக் கூடாதா? என்பனபோன்ற பேச்சுக்கள் வாலிபர்களுக்கு இனிப்பாக இரா. கேட்டாயோ இந்தக் கொடுமையை? சும்மா இருப்பதோ? நாம் என்ன சோரணை யற்றவர்களோ? புறப்படு, போரிடு, அநீதி ஒழியுமட்டும் அல்லது நாம் ஒழியும்வரை போர். இந்தப் பேச்சுத்தான் ரைலிபர் செவி ஏறும், வாலிபர்கள் நடமாடும் எஃகுக் கம்பிகள், அகத்திலே அருவிப்போல் ஆர்வம் முகத்திலே வீரக்களை. செயலிலே துடிதுடிப்புக் காணப்படும். தலை குணிந்து நிற்பது பெருமூச்செறிவது, நம்மால் காரியமா என்று இழுத்துப் பேசுவது. ஆகிய முறைகள்