பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

தீண்டாமை தமிழ் நாட்டிலே எங்கு பார்த்தாலும் சிற்பிகளின் சிந்தனையைச் சிறப்புற விளக்கிடும் எழில் மிகுந்த கோயில் கள் உள்ளன. முடியுடைய மூவேந்தர்களும், டல்லவரும் கட்டிய ஆலயங்கள் - அவை ஒவ்வொன்றுக்கும் சிறப்புகள் பகிமைகள் கூறப்பட்டுள்ளன, பாடல் பெற்ற ஸ்தலங்கள் என்று புகழப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ் வொரு அற்புதம் கூறப்படுகிறது. தாயுமானார்,தயாபரர், தீராத வல்வினையைத் தீர்த்தவர், தில்லையில் திருநடனம் புரிபவர். திருவரங்கத்து அண்ணல் என்று பெயரினாலேயே பொருட்செரிவும் வைத்துப் பேசப்படுகிறது.பாடல் கேட்டு கதவு திறக்கப்பட்ட கோயில்,படிக்காசு கிடைத்த கோயில் தூது சென்ற தலம், என்று பல்வேறு மகிமைக் கதைகள் கூறப்படுகின்றன. அதாவது, ஆலயங்கள் ஏராளமாக உள்ளன. அவை களில் அழகும் மகிமையும் பேசப்படுகின்றன. அங்கு சென்று சேவிப்பது இகபரசுகம் தரும் என்று பேசப்படு கிறது. கோயிலில்லா ஊரிலே குடியிருக்கவே வேண்டாம் என்பது பழமொழி. திருக்கோயிலை வளம் வராத கால் என்ன காலோ. ஐயளைச் சென்று காணாத கண் என்ன கண்ணோ என்று பஜனைகள் நடக்கின்றன. தூய்மையின் இருப்பிடம் என்று, கூறிப்படுகிறது. இவ்வளவு கூறி விட்டு எடுகளை இதற்காகக் குவித்துவிட்டு, இறைவனின் இல்லங்களை எங்கும் எழுப்பிவிட்டு அவற்றின் அருமை பெருமை, அங்குப் போக வேண்டியதின் அவசியம் போனால் ஏற்படும் பலன். ஆகியவற்றைப் பாட்டாகவும்,கூத்தாகவும் படமாகவும் எடுத்துக் காட்டிவிட்டு,கேட்டதும் மக்களுக்கு ஓர் ஆவல்.. பற்று பாசம் எங்படும்படி செய்துவட்டு ஆசையைத் தட்டி எழுப்பிவிட்டு, வீணையை மீட்டத் தொடங்கியதும். இசைகேட்க வருபவனின் காதுகளை அடைப்பது போல, எழில்மிகு சித்திரத்தைத் தயாரித்துக்