பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49 காண வாரீர் என்று அனைவரையும் அழைத்துக் காண வரும் சிலரின் கண்களைக் கட்டியிருப்பது போல, பழச்சாற் றின் இனிப்பைக் கூறிக்கொண்டு, பருகக் கொஞ்சம் தருக என்று கேட்பவனை விரட்டுவது போல, ஆலயங்களுக்கு மகிமையும். பலனளிக்கும் சக்தியும் இருப்பதைக் கூறி விட்டு, அங்கு வரக்கூடாது நுழையக்கூடாது என்று சிவரை அல்ல, ஏறக்குறைய எட்டு கோடிமக்களைத் தடுத்து வருகிறோம். இன்று நேற்றல்ல: தலைமுறைத் தலைமுறை யாக அவர்கள் ஏதோ குற்றம் செய்ததற்கு தண்டனையாக அல்லது - அவர்கள் தமக்கு இழைக்கப்படும் கொடுமையாக நம்மைத் தண்டிக்கும் சக்தியைப் பெறாத ஒரே காரணத் தால். இது முரையா -நீதியா -கருமமா - நெடுநாட்களுக் குச் செல்லுமா- இவை கேள்விகள் அல்ல-எண்ணத்தில் கபடமில்லாத எவருக்கும் இருக்கும் இதயத் துடிப்புகள். பொருளைக் காட்டி மறைப்பார் குழந்தைகளிடமிருந்து பெற்றோர். நாமோ புனித ஸ்தலங்களின் பெருமையைக் கூறிப் பூட்டி விடுகிறோம். அங்கு ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் வரக்கூடாது என்று. என? முடிந்தது செய்து வந்தோம் என்பதுதான் உண்மையான காரணம், மற்றக் காரணங்கள், மனதிலே எழும் அலைகள் உண்மையல்ல. பயனும் பெருமையும் இருப்பதாகவும் ஒரு இடத்தைக் குறிப்பிட்டு, அதே இடத்துக்கு ஒரு குறிப்பிட்ட கூட்டத் தினரை நுழையக்கூடாது என்று சொன்னால், எவ்வளவு வேதனை இருக்கும். கூறும் நமக்கு எவ்வளவு கடினமான மனது இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள். இன்றிரவு உங்கள் கையை மூடிக்கொண்டு, உங்கள் கொஞ் சுமொழிக் குழந்தையைக் கூப்பிட்டுத் தம்பி! கைக்குள்ளே ஒரு அருமையான வஸ்து இருக்கிறது பளபளப்பானது யாரு கும் கிடைக்காது என்று கூறுங்கள். குதித்துக்கொண்டே அந்தக் குழந்தை அண்ணா அதை எனக்குக் கொடேன் என்று கொஞ்கிக் கேட்கும் போது ஊஹூம் தரமுடியாது. உனக்கல்ல அது, தரமாட்டேன் என்று கூறிப்பாருங்கள். நீங்கள் படுகிற பாடு தெரியும். நாணும் தான் - எத்தனை கிள்ளுகளோ, எவ்வளவு மல்லுகளோ அழக்கூடச் செய்யும் 15