பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50 குழந்தை. அம்மா அவசரமாக ஓடிவந்து, குழந்தையை அனைத்துக் கொண்டு பொல்லாத விளையாட்டு' என்று கூறி, நமது கரத்தைப் பிடித்து இழுத்துக் 'குழந்தையை ஏமாற்ற தீர்கள் என்று கோபிப்பார்கள். குடும்பத்தைப் பொறுத்தமட்டிலே, இதிலே ஒருவகைக் குதூகலம்கூட இருக்கும். குழந்தையின் உள்ளத்திலே எவ்வளவு வேதனை ஏற்பட்டிருக்கும் தெரியுமோ? குழந்தையின் மனமே இப்படி நாம் செய்துவரும் கொடுமை. எட்டுக்கோடி மக்களுக்கு. இறைவனின் இல் லத்தின் அருமைதனைக் கூறிக் கொண்டே "அந்த இடத் தில் மட்டும் நீ வரக்கூடாது என்று கூறுகிறோம். சரியா? என்று யோசித்துப் பாருங்கஉ. பக்தர்களைப் பரமன் வாழும் இடத்துக்குச் செல்ல வொட்டாது தடுப்பது, சேயைத் தாயிடகிருந்து பிரிப்பது போன்ற பாதகமென்று, இதோபதேசம் செய்து பார்த்தா யிற்று. இந்து மார்க்கத்தின், இந்நாள் இருக்கும் இந்த தீண்டாமை. அந்நாளில் ஆன்றோர் வாழ்ந்த விதம் வேறு: சான்றோரெல்லாரும் தீண்டாமையைக் கையாண்டதில்லை என்று விளக்கம் கூறியாகிவிட்டது. எந்த இந்து மதத்திலே அந்த மக்கள் இருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டுப் புள்ளி விவரம் காட்டிப் பூரிக் கிறோமோ அதே மதத்திலிருக்கும் மக்களை மதத்தின் ஊற்றாகக் கருதப்படும் கோயிலிலேயும் அனுமதிக்கா திருப்பது, மனப் புண்ணை ஆற்ற முடியாத புண்ணை ஏற் படுத்திவிட்டது. இதனை ஆற்றிக்கொள்ள அந்த மக்களில் பலர், சிலுவைச் சூரணமோ, இஸ்லாமிய முறையையோ நாடுகின் றனர். இந்து சமுதாயம் குறைந்து வருகிறது என்ற யூகம் கூறியாகிவிட்டது. வீரம், தியாகம்,கடமை, க்தி எனும் பல்வேறு உணர்ச்சி நரம்புகளை மீட்டிப் பார்த்தாகிவிட்டது. நந்தனாரை, திருப்பாணாழ்வாரை மக்களுக்குக் கவ னப்படுத்தி யாகிவிட்டது.