பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57 போன்ற பளளிக்கூடப் பாடங்களெல்லாம், நமக்குக் கசப் பாகவும், அலாவுதீன் கதை, அலிபாபா கதை, ஆயிரம் தலை வாங்கியவள் கதை, கூடுவிட்டுக் கூடுபாயும் கதை காளி கூளிக்குச் சொன்ன கதை போன்றவைகள் சுவை தந்து, நம்மைக் கவர்ந்திருக்கின்றன. என்னைக் கவர்ந்த புத்தகங்கள் இவை போன்றவை - அந்தப் பிராயத்தில் - துள்ளித் திரிந்த பள்ளிப் பருவ காலத்தில். எனக்கு மட்டுமா? உங்களுக்குந்தான் - கவனப் படுத்திப் பாருங்கள், தெருத் திண்ணையில் மாடத்தில் மங் கலாக அகல் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது - சுவற் றில் சாய்ந்தபடி, சுற்றும் முற்றும் என்ன நடக்கிறது என்பதும் தெரியாமல்,சிற்றெறும்பு கடித்தாலும் கவலைப் படாமல், படித்துக்கொண்டிருக்கும் காட்சி, கவனத்திற்கு வரும். மகிழ்ச்சி ஊட்டுவது, புதிய எண்ணங்களைத் தூவுவது பழைய கருத்துக்களை மாற்றுவது. பண்பு தருவது, செயல் புரியும் திறன் அளிப்பது என்பன போன்ற பயன்களைப் பெறுவதற்கே; படிக்கிறோம் - ஒவ்வொரு வகைப் புத்தக் மும் ஒவ்வொரு பயனை, ஒவ்வோர் அளவுக்குத் தருவதுடன் நமது மனதை உருவாக்க உதவுகின்றன. மகிழ்ச்சியூட்டும் புத்தகம், செயலாற்றும் திறனைத் தந்தே தீருமென்றோ புதிய எண்ணத்தைத் தூவும் ஏடு, மகிழ்ச்சி ஊட்டக் கூடிய இனிய நடை அழகுடன் இருந்தே தீருமென்றோ கூறமுடியாது. நாரதரின் கானம் பற்றியோ, தேவலோகக் காட்சி பற்றியோ. சுவைதரும் விதமாகத் தீட்டப்பட்ட ஏட்டினைப் படிக்கும்போது, ஒருவகை இனிமை ஏற்படத்தான் செய் கிறது. ஆனால் புதிய எண்ணம், விழிப்பு. செயலாற்றும். தன்மை ஏற்படுவதில்லை. பக்திப் பரவசத்துடன் அந்த ஏடுகளைப் படிப்போரும். போய்ப் பார்த்துவிட்டே வர வேண்டும் நாரதரை என்றுபயணப்படுவதில்லை. மலேயாவைப்பற்றிய வரலாற்றுப் புத்தகத்திலே சுவை இருக்காது. எனினும், படிப்பவர்கள் வசதி கிடைத்தால் அங்குபோய் வரலாம் என்ற எண்ணம் கொள்ளவும். செயலாற்றவும் முடிகிறது.