பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

7 மனிதன் கஷ்டம் அனுபவித்தபோது, மிதவாதிகள் அவனுடைய கண்ணையும் கருத்தையும், எந்த உண்மைக் காரணத்தால் மனிதன் கஷ்டப்படுகிறானோ அந்தக் காரணங் களைக் காணவொட்டாமல் தடுத்து கைலாயம், வைகுந்தம். காகுந்தன், காளியாயி, ஜெபமாலை, உடுக்கை இப்படி வேறு பல பொருள்கள், முறைகள் மீது திருப்பி விட்டனர். மனி தன் திக்குத் தெரியாத காட்டைப் போலானான். எனவே தான். அவன் தன் நிலையை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் தோற்கவேண்டி நேரிட்டது. எழுத்துக் காட்டாக ஒன்று கூறுகிறேன். கூலி உயர்வுக்காகவோ, போனசுக்காகவோ ஒரு தொழிலாளர் சங்கம் போராடுகிறது என்று வைத்துக் கொள்வோம். பாட்டாளி கூட்டம் முடிந்து வீடு போகிறான். மனைவி கேட்கிறாள்: வேலை கூடத்தான் இல்லையே, எங்கே போய் சுற்றிவிட்டு வருகிறீர்கள்.மணி பத்தா கிறதே... அவன்: ' பைத்தியமே, இன்று மீட்டிங்கு சொல்லுகிறான். ன்று அதுதான் இருக்கிறதே ஒவ்வொரு தினமும் சலித்த குரலில் மனைவி கூறுகிறாள். 'வள்ளி,வர்க்கப் போராட்டம் நடக்கிறது. இதிலே பாட்டாளி வர்க்கந்தானே ஜெயிக்கும் என்று அவன் கூறு கிறான். அன்று கேட்ட சமதர்மப் பிரசாரத்தின் ஆர்வத் தால்,என்னமோ பொன்னியம்மாள் புண்ணியத்தாலே அந்த முதலானி மனது மாறி, ஏழைகள்மேல் இரக்கங் காட்டவேணும், பரம்பரைப் பழக்கத்தால் வள்ளி கூறு கிறாள் இதுபோல். இவ்விதம் இருவிதமான முறைகள், ஒன்றிற்கொன்று நேர்மாறானவை பேசப்படுகின்றன. ஒரே குடும்பத்தில் ஒரே ஒரு இலட்சியத்தைப் பெற, இந்த முரன்பாடு ஒழிக் கப்பட்டால்தான் சுவையுள்ள அந்த இலட்சியத்தை நடை முறையில் வெற்றிகரமாக்கிக் காட்டமுடியும். எனவே தான், மனதிலே உள்ள தளைகள் அறுபட்டால்தான் சம தர்மத்திற்குள்ள தடைகள் ஒழிக்கப்படும் என்று அறி வியக்கம் கூறுகிறது.