பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 103

தேவி கருமாரி கஸ்யப முனிவருக்கு இளம் சிங்கத்தின் மீதமர்ந்து திரிசூலம், உடுக்கை, ஞானவாள், பொற் கிண்ணம் ஏந்திக் காட்சியளித்தாள். கஸ்யப மகரிஷி மகிழ்ந்தார். இன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் தேவியின் அருள் பெற்று துன்பம் நீங்கி, இன்பம் ஓங்க வாழ்வது கண்கூடு.

'அவனருளாலே அவன்தாள் வணங்கி”

என்பது திருவாசகம், இறையருளை இறையருளாலே பெற்றுத் துய்த்து உய்வோமாக!