பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. அருட்பா-சீறாப்புராணம்

ஒப்புமை நோக்கு

பாரத நாடு பழம்பெரும் நாடு. இந்நாட்டில் வாழும் மக்கள் மிகப் பழங்காலத்திலிருந்தே கடவுள் நம்பிக்கையோடு வாழ்ந்து வருகின்றனர் பல்வேறு மதங்களை-சமயங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கடவுளர்களை வழிபட்டாலும் அவரவர் தம் வாழ்க்கை யினை அமைதியோடு நடத்தி வருகிறார்கள். ஞானத் திலும் பரமோனத்திலும் நம் பாரத நாடு, பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாரதியாரும் பாடினார். -

முதலாவதாக சீறாப்புராணக் கடவுள் வாழ்த்துப் பாடலை எடுத்துக்கொள்வோம்.

சிறந்தமெய்ப் பொருளை அழிவிலா மணியைத்

தெரிந்துமுக் காலமும் உணர்ந்து

துறந்தவர் இதயா சனத்திருந் தவனைத்

தொடரின்ப துன்பமற்றவனைப்

பிறந்தபல் லுயிரின் மனத்துள வுறைந்து

பிறப்பிறப் பொன்றிலா தவனை

மறந்தவர் சுவர்க்கப் பதியையும் மறந்து மண்ணினில் மதிமறந் தவரே

இந்தப் பாடல் சீறாப் புராணத்தில் கடவுள் வாழ்த்துப் பாடல் ஆகும். இஸ்லாமியர்களின் ஒப்பற்ற பெரியோ ரான மகம்மது நபி அவர்களின் வரலாற்றைக் கூறுவது