பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩卫命 சமயந்தொறும் நின்ற தையலாள்

ஒருவரிடமிருந்து போய்விடுகிறது. எனவே மெய்யான பொருளாகச் சொல்ல போன்றே உலகில் நாம் காணும்

அதனை முடியாது. இது ஒவ்வொரு பொருளும் அழியக்கூடிய தன்மை உடையதாகும். ஏன்? மனிதர் களையே எடுத்துக் கொள்வோமே;

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை யென்னும் பெருமை யுடைத்து இவ் வுலகு

என்று திருவள்ளுவர் கூறுவது போன்று நேற்றைக்கு

இருந்தனர் இன்றைக்கு இல்லை. இதே போன்று "இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பார் என்று எண்னவே சதமில்லை. நெஞ்சே!" என்று கூறுவர்

அனுபவப்பட்ட பெரியவர்கள். எனவே இந்தவுலகில்

மெய்டபொருளாகக் கருதத் தக்கது இறைவன் என்ற ஒரு பேரருள் பெறுந்திறமேயாகும். மெய்ப் பொருளாக விளங்குபவர் ஒப்பற்ற உயரிய கடவுளாவர் எனவே

உமறுப்புலவர் இறைவனை முதலில் சிறந்த மெய்ப்பொருள்' என்றார்.

அடுத்து ஆண்டவனை அழிவிலா மணியே என்றார். மணிகள் பல வகைப்படும். மாணிக்கம், வைரம், வைடூரியம், கோமேதகம், புஷ்பராகம் தலிய ன வெல்லாம் மணிகள் என்று கூறப்படும். இவற்றைச் சேர்க்க வேண்டும் என்பதில் அன்றிலிருந்து இன்று வரை மனிதனின் முயற்சியும் ஆசையும் குறைந்ததாகத் தெரிய வில்லை. ஆனால், இப்படிப் பாடுபட்டுச் சேர்க்கும் இவ் விலையுயர்ந்த மணிகள் அழியாத தன்மை வாய்ந்தனவா என்றால் அதுதான் இல்லை. அழிவிற்கு ஆளாகும் இம் மணிகள் மனிதனை ஆட்டி அலைக்கழித்து மனித மனத்தின் அமைதியையே அழித்துவிடுகின்றன. எனவே,