பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720 சமயந்தொறும் நின்ற தையலாள்

வேண்டாமை இல்லாதவன்; இன்புறு சோதியாக இணையற்று விளங்குபவன். எனவே, இன்ப துன்பங்கள் இறைவனை ஒரு நாளும் ஆட்டி அலைக்கழிப்பதில்லை,

அடுத்து, பிறந்தபல் லுயிரின்மனத் துளவுறைந்து பிறப்பிறப் பொன்றிலாதவன் ' என்றார் உமறுப் புலவர்.

இவ்வுலகில் எண்ணற்ற உயிர்கள் பிறக்கின்றன; வளர்கின்றன; வாழ்கின்றன; இறுதியில் மடிந்து முடி, கின்றன. தோற்றம் பெற்ற உயிர்களில் எல்லாம் இறைவன் உறைகின்றான். இறை என்ற சொல்லிற்கே தங்குதல்' என்பது பொருள். இறைவன் தான் தோற்றுவித்தபடைப்பித்த எல்லாவுயிர்களிலும் தங்கி உறைகின்ற காரணத்தினால்தான், 'இறைவன்’ என்று வழங்கப் படுகின்றான். 'மனத்தளவு உறைந்து’ என்றால் "மனமாகிய எல்லையில் தங்கி’ என்பது பொருளாகும். தாயுமானவரும் பார்க்கின்ற மலரில் எல்லாம் பரமனே உறைவதாகவும், எனவே தாம் அப் பனிமலரைப் பறிக்கவும் உள்ளங் கூசுவதாகவும் பாடியுள்ளார்.

பிறப்பு இறப்பு என்ற இந்த இரண்டும் உலகில் எல்லா வுயிர்க்கும் வருவனவாகும். ஆனால் இறைவனோ எனில் பிறப்பும் இறப்பும் இல்லாதவனாவான். இதனையே திருவாசகம் தந்த மணிவாசகப் பெருந்தகையார், 'ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி” என்றார். சிட்டுக்குருவிக்கும் சிவபெருமானுக்கும் சிலேடை யாகப் பாடவேண்டும் என்று ஒரு புலவரைக் கேட்க அவர் 'பிறப்பிறப்பில்’ என்றார். இத்தொடர் சிட்டுக்குருவிக்கு எவ்வாறு பொருந்துகின்றது என்று பார்ப்போம். சிட்டுக் குருவிக்குப் பிறப்பு இறப்பில்-அதாவது வீட்டின் இறவானத்தில் ஆகும். சிட்டுக்குருவி இறவாணத்தைத்