பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மாணிக்கவாசகர்

உலகிடைத் தோன்றி வளர்ந்து செழித்து வாழ்ந்த மொழிகள் பல; இன்றளவும் வாழ்ந்துவரும் மொழிகள் சில; அவற்றிலும் இலக்கிய இலக்கணச் செல்வங்களை இடையறாது பெற்று, அதனால் வளம்பெற்று இன்றளவும் உயர்தனிச் செம்மொழியாய் விளங்கும்மொழி தமிழாகும். ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத் தின் மொழி என்றும் கிரேக்கம் இசையின் மொழி என்றும் ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றும், பிரெஞ்சு துரதின் மொழி என்றும், இத்தாலியன் காதலின் மொழி என்றும் அறிஞர் பெருமக்களால் கூறப்படுவதுபோன்று தமிழ் இரக்கத்தின் மொழி என்றும் பக்தியின் மொழி என்றும் பாராட்டப் பெறுகின்றது. அளவிலும் சுவையிலும் தமிழிலுள்ள திருப்பாடல்கள் போல் பிற இலக்கியத்தில் இல்லை என்பர் ஆராய்ச்சியாளர்.

"தமிழோடு இசை பாடல் மறந்தறி யாதவர்'களான சமயக் குரவர்கள் காதலாகிக் கசிந்து கண் ணிர் மல்கி’ப் பாடிய பாடல்கள் கல்நெஞ்சினையும் கணிவிப்பனவாகும். ஒருவாத புகழுடைய திருவாதவூரில் பிறந்து, அரிமர்த்தன பாண்டியனிடம் தென்னவன் பிரமராயன்' என்ற விருதுப் பெயர் பெற்று அமைச்சராக விளங்கி, மன்னன் பொருட்டுக் குதிரை வாங்கச் சென்ற பொழுது, திருப் பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குரு வடிவில் இருந்த சிவபிரானைக் கண்டு சித்தம் பறிகொடுத்து, ஏற்ற பணியினை மறந்து இறைவன் திருத்தொண்டு