96 சமயந்தொறும் நின்ற தையலாள்
மாத்தவ ளேஉன்னை அன்றிமற்
றோர்தெய்வம் வந்திப்பதே.
-அபிராமி அந்தாதி: பாட்டு: 13
அபிராமி அம்மை. தன் திருவடிகளை வந்து சரணடையும் அடியவர்களுக்குச் சொர்க்கலோக பதவியை அன்போடு தருவாள் என்கிறார் பட்டர்.
வந்தே சரணம் புகும்.அடி
யாருக்கு வானுலகம் தந்தே பரிவொடு..........
-அபிராமி அந்தாதி: பாட்டு: 34
தான் வெறுப்பன செய்தாலும் பொறுமையால் அடிய வர்களை ஆட்கொள்ளுங் அருட்டிறம் உடையவள் அம்மை என்கிறார் அபிராமிபட்டர்.
வெறுக்கும் தகைமைகள் செய்யினும்
தம்அடி யாரைமிக்கோர் பொறுக்கும் தகைமை.........
-அபிராமி அந்தாதி: பாட்டு: 46
மேகத்தைப் போன்ற, பூவையணிந்த குழற் பாரத்தை யுடைய அபிராமியின் கடைக்கண்கள், அத் தேவியின் அடியவர்களுக்கு எல்லாவகைச் செல்வங்களையும் தரும்; கல்வியைத் தரும்; ஒரு நாளைக்கேனும் தளர்ச்சியை அறியாத உறுதியான மனத்தை அளிக்கும்; தெய்வீக அழகை வழங்கும்; மனத்தில் வஞ்சங்கொள்ளாத உறவின ரையும் நண்பரையும் நல்கும்; இன்னும் உலகில் எவை எவை நல்ல பொருள்களோ அவை எல்லாவற்றையும் இனிதே தரும். இவ்வாறு புகழ்கிறார் அபிராமிபட்டர்.