3}
“ஓ! என்ன வேடிக்கை இது’ என்று கூறிக் கொண்டே காகிதத் துண்டில் அச்சாகியிருக்த தன் படத்தைப் பாரித்தார் வீரபாகு, -
பாவம், பங்களுர்ப் பங்கஜம் விழி பிதுங்க விழித்தாள்.
புதிய கார்ச் சத்தம் அழுந்தி அடங்கியது. அப்போது:
‘ஹல்லோ!’ என்று கூறிக் கொண்டே சிறுகதை மன்னன் அதிவீரராமபாண்டியன் வந்து கின்றான்!...
11. தூயக்கனல்
அசோக மரத்திற்கே உரிய இயல்பான கம்பீரத் தோடும், கண்னேக் கவரும் அழகான மிடுக்கோடும் வந்து கின்றான் சிறுகதை மன்னன் அதிவீரராம டானடியன.
“ஹல்லோ! என்று அவன் விளித்த சொல்லைக் கேட்டதும், சமாளிக்க முடியாத பதட்டத்தோடு தலையை மெல்ல உயர்த்தினுர் தொழிலதிபர் வீரபாகு, அவரது கையில் இருந்த காகிதக் கிழிசலில் அச்சிடப் பட்டிருந்த அவரது புகைப்படம் இதுதான் நல்ல சமயம் என்று எண்ணியது போல், மெதுவாகக் கீழே கழுவி விட்டது.
ஆணவம் மண்டிய கருவம் துலங்க கின்று கொண் டிருந்தான் அதிவீரராம பாண்டியன்.
அவன் இமைப் பொழுதுக்கு முக்தி அழைத்த குரலில் தெறித்த கயமான ஆங்கில உச்சரிப்பின் மேன்மையை ரசித்தவராக, அவனையே இமைக்காமல் பார்த்தார் வீரபாகு எதையோ மறந்து, மறந்ததை கினைவு படுத்திக் கொண்டவர் போன்று ஓர் அரைக் கணம் அவர் தட்டுத்தடுமாறிப் போர்ை.