பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுகித்துக் களிக்க if கும்பியதை ஒளிவு மறைவின்றிப் பச்63)சயாகத் தெரிவிக்க முன்வந்ததில் ஆச்சரியப்படு தெற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்தச் செய்கையில் வெட்க உணர்ச்சிக்கே இடம் கிடையாதா என்று கேட்கலாம். உஜ்மையில் (ஆத்தாறு ஆண்டுகளுக்கு முந்திய பிரபுத்துவ சகாப்தத்தின் சார்நிலையில், ஆசைநாயகிகளையும் அபிமான ஸ்திரீகளையம் வைத்திருப்பது சமூகத்தில் அந்தஸ்தைத் (தேடித் தருகிற ஒரு காரியமாகவே இருந்தது என்றுகூடச் சொல்லலாம். அந்தக் காலத்தில் அது 'பெரிய இடத்துப் பிரபுத்துவப் பண்பாடாகவும் பாரம்பரியமாகவும் இருந்து வந்தது. 'எனவே அத்தகைய பெரிய இடத்து ஆதரவையும், அரச சபையையும், ஆஸ்தானங்களையும் அண்டிப் பிழைத்து வந்த புலவர்களும் அந்தப் பெரிய இடத்து நாகரிகத்தின்மீது மோகம் கொண்டதில் அதிச பிப்பதற்கு எதுவும் இல்லை. எனவே அந்தக் காலத்தில் ண விடு தூதுப் புலவர் தமது ஆவலைப் பகிரங்கமாகப் புலட்ப்படுத்த முனைந்தது அப்படியொன்றும் துணிச்சலான், வெட்க உணர்ச்சியற்ற காரியமாகி விடாது என்றே சொல்லலரம். இருந்தாலும் சமுதாயத்துக்கு நல்லது கூறவேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்ட ஒரு புலவர் தமது அந்தரங்கமான ஆவலையும் ஆசையையும் ஒரு கதையாக, பிரபந்தமாகத் தர முனைந்தது பொறுப்பை உணராத துவர த (போக்கைத்தான் காட்டுகிறது. என்றாலும் அவர் கதையம்சத்தைப் பிரதானப் படுத்தி அழுத்தம் கொடுத்து விடாமல், தூது பொருளான பணத்தின் சக்தியையும் தன்மைகளையும், அதனடிப்படையில் மனித குணங்களை யும் ப3ல்படச் சித்திரித்து, ஒரு புதுமையைச் சிருஷ்டித்த தன் மூலம், தமது இலக்கிய அந்தஸ்தையும், நூலின் பகனையும் காப்பாற்றிக் கொண்டு விட்டார். என்று தான்