பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 எனலாம். எனவேதான் வேதநாயகம் பிள்ளையைப்பற்றி? இங்கு குறிப்பிட்ட நேர்ந்தது. என்றாலும் அந்தப் பஞ்சத்தைப் பற்றிய பல்வேறு தன்மைகளையும் நாம் புரிந்து கொள்ள உதவுகின்ற நூல்கள் காந்திமதி அந்தாதியும், பஞ்சலட்சண மும்தான். இவ்விரண்டிலும் பஞ்சலட்சணம்தான ஈடு இணை வற்றது; தலைசிறந்தது. காந்திமதி அந்தாதி அளவிலும் தரத்திலும் பஞ்சலட்சணத்தைவிட, மிகவம் சிறிய நூல் தான் ' என்றலும், அதுவும் பஞ்சத்தின் தன்மைகளை நன்றாகவே எடுத்துக் கூறுகின்றது. ஆ: கீ சொக்க நR" ஆதி சிா நீதா காந்திமதி அந்தாதியை இயற்றிய அழகிய சொக்கநாத பிள் ளை சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்தவர். தென்பாண்டிச் சீமையிலுள்ள திருநெல்வேலி நகருக்குச் சுமார் ஒன்றரை மைல் தூரத்துக்கு வடக்கேயுள்ள தச்சநல்லூர் என்ற கிராமத்தில், ' வன்னியப்ப பிள்ளை என்..irரின் மகனாகப் பிறந்தவர். இவர் சென்ற நூற் றாண்டின் இறுதியில், . 1890ம் ஆண்டுவாக்கில் காலம் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய விவரமான குறிப்புக்கள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை. - நமது அறிமுகத்துக்குரிய காந்திமதி அந்தாதியைத் தவிர, காந்திமதியம்மை பிள்ளைத். தமிழ், கோதையந்தாதி முதலிய சிறு பிரபந்தங்களையும், ஏராள மான தனிப் பாடல்களையும், இசை நயம் மிகுந்த கும்மிப் பாடல்கள், பத 'சாகித்தியர்கள் முதலியவற்றை பும் இவர் இயற்றியுள்ளார். திருநெல்வேலிக்கு வடக்கே நான்கு மைல் தூரத்திலுள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவரும், திருநெல்வேலி தெற்குப் புதுத்தெருவில் குடியிருந்தவருமான - வள்ளல் முத்துசாமிப் பிள்ளை - என்