பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 11


வளைவுகள், வட்டங்கள் அனைத்தையும் தயவு தாட்சண்யமின்றி உடைக்கத் தூண்டுவது புரட்சித் தன்மை வாய்ந்த இலக்கியம்! வெறும் அப்பட்டமான ரசனை, காம விகாரங்கள் உள்ள இலக்கியங்கள் படிக்கத்தக்கன அல்ல. அதுபோலவே, இருக்கும் நிலைமைகளை - அவலங்களை நினைந்து அழுது புலம்பி ஓய்வனவும் படிக்கத் தக்க இலக்கியங்கள் அல்ல. மானுடத்தை உறக்கத்தினின்று எழுப்பி முன்னேற்றத் திசையில் உசுப்பிவிடுவனவே மறுமலர்ச்சி இலக்கியங்கள்!

பழைமையை வெறுத்துப் புதுமையை நாடும் உணர்வு மானிடத்திற்கு இயல்பாகவே உண்டு இந்தப் புதுமையை நாடும் வேட்கையினால்தான் மானிடன் தனது உணவில், உடையில், வழிபாட்டில் புதியன பலவற்றைக் கண்டிருக்கின்றான்!

யுகந்தோறும் கடவுளைக்கூட மாற்றும் மனப் போக்குடையவன் மானிடன்! ஆனால், கடவுளை மாற்ற அவனால் முடியவில்லை. அதனால், பெயர்களையும் உருவங்களையும் மாற்றிக் கொண்டான் ஆதலால், மறுமலர்ச்சி இலக்கியங்களுக்கு வயது இல்லை! சங்க காலத்திலேயே மறுமலர்ச்சி வேகம் வந்துவிட்டது!

“ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்த்தன் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்!
இன்னா தம்ம இவ் வுலகம்!
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே!”

(புறம்-194)